தவழ்ந்து விளையாடுகின்ற இளம் பருவத்தில்; கோள் அரி இரண்டு பற்றி - வலிமையுள்ள சிங்கங்கள் இரண்டினைப் பிடித்து; மாட முன்றினில் கொணர்ந்தனை- மாடத்தின் முற்றத்தில் கொணர்ந்தாய்; கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி- அவ்வாறு கொணர்ந்து அவற்றிற்குக் கோபம் மூளுமாறு ஒன்றோடு ஒன்று போர் செய்யுமாறு விடுத்து; முறையின் ஓடி மீள அருவிளையாட்டு- முறையாக ஓடி மீளா நிற்க, அவ்விளையாட்டினை; விதியிலாதேன் இன்னம் காண்பெனோ- நல்லூழ் இல்லாத யான் இனி மேலும் காண்பேனோ? |
அரி - சதங்கையின் உள்ளிடும் பரல். கோள் அரி - வலிமை பொருந்திய சிங்கம். ''அரி பொலி கிண்கிணியார்ப் போவா வடி'' (கலி - 81, 6) ''சுடுபொன் வளைஇய ஈரமை சுற்றொடு பொடியழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி'' (கலி 85-1-2) ''கிண்கிணி களைந்த கால்'' (புறம் 77-1) முதலானவை காண்க. இந்திரசித்தின் இளம் பருவத்தில் விளையாடிய அஞ்சாமையோடு கூடிய விளையாட்டினை நினைத்து மண்டோதரியின் தாயுள்ளம் தவிக்கின்ற தவிப்பினை இப்பாடல் படம் பிடித்துக் காட்டும் நலன் காண்க. |
(49) |
9235. | 'அம்புலி! அம்ம வா!' என்று அழைத்தலும், அமர் |
| வெண் திங்கள் |
| இம்பர் வந்தானை அஞ்சல் என இரு கரத்தின் ஏந்தி, |
| வம்புறும் மறுவைப் பற்றி, 'முயல்' என வாங்கும் |
| எண்ணம், |
| எம் பெருங் களிறே! காண, ஏசற்றேன்; |
| எழுந்திராயோ! |
|
'அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும்- (இளம் பருவத்தில் சந்திரனைக் கண்டு நீ) 'அம்புலி! அம்ம வா!' என்று அழைத்த அளவில்; அமர்வெண் திங்கள் இம்பர் வந்தானை- விளக்கமுடைய வெண்திங்கள் இந்த உலகிற்கு (நின்கட்டளையை மறுக்க அஞ்சி) வந்தவனை, 'அஞ்சல்' என இரு கரத்தின் ஏந்தி- 'அஞ்சாதே எனக் கூறியபடி இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு; வம்புறும் மறுவைப் பற்றி- புதுமையாக உள்ள (நீ நினைத்த) களங்கத்தைப் பற்றி; 'முயல்' என வாங்கும் வண்ணம் - 'முயல்' எனக் கருதி எடுக்கும் தன்மையைக்; காண ஏசற்றேன்- காணுதற்கு ஆசைப்பட்டேன்; எம்பெருங்களிறே எழுந்திராயோ - எம் பெரிய களிறு போன்றவனே |