ஆச்சரியப்பட; உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் - மூன்றுலகைத் தன் அடிகளால் அளந்த திருமால் வளர்ந்தது போல; என உயர்ந்தான் - என்று கூறும்படி வளர்ந்தான். |
(27) |
9669. | விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப, |
| பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் |
| பொன் |
| தசும்பு நின்று இடைந்து இரிந்திட, மதி தகை |
| அமிழ்தின் |
| அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து |
| ஆர்த்தான். |
|
விசும்புவிண்டு இருகூறுற - வானம் பிளந்து இருபங்காக; கல்குலம் வெடிப்ப- மலைகள் வெடித்திட; பசும்புண் விண்டென - பசிய புண்கள் மேலும் பிளந்தது போல; பகலவன் பசும்பொன் தசும்பு நின்று இடைந்து இரிந்திட - கதிரவன், பசிய பொற்குடம் போல இருந்து தன் இடத்திலிருந்து திரிந்திட; மதி தகை அமிழ்தின் அசும்பு - சந்திரனின் பண்பாகிய அமுதத் துளிகளை; சிந்திநொந்து உலைவுற - சிந்தி வருந்தித் துன்பமடைய; தோள்புடைத்து ஆர்த்தான் - தோளைத் தட்டி இராவணன் ஆரவாரம் செய்தான். |
(28) |
9670. | 'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின் |
| நலத்தால், |
| திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் |
| செறித்தான்; |
| மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர் |
| துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். |
|
வெஞ்சமம் நணித்து- கொடிய போர் அண்மை நிலையில் வந்து விட்டது; என்பது ஓர் உவகையின் நலத்தால் - எனும் ஒப்பற்ற மகிழ்ச்சியின் நன்மையால்; திணித்தடங்கிரி வெடித்து உக - வலிய பெரிய மலை வெடித்துப் பொடியாகி விழ; சிலையை நாண் தெறித்தான் - வில்நாணைத் தெறித்தான்; மணிக் கொடுங்குழை வானவர் - அழகிய வளைந்த குழைகளை அணிந்த தேவர்கள்; தானவர் - தானவ குலத்தினரது; மகளிர் - பெண்டிர்; துணுக்கம் எய்தினர் - அச்சமுற்றனர்; மங்கல நாண்களைத் தொட்டார்- |