பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்271

(அதனால்)   எங்கே  தங்கள் தாலி மங்கலக் கயிறு அறுபட்டுப்
போகுமோ எனத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர்.
 

(29)
 

9671.

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர்

மெய்யான்.

 

சுரிக்கும் மண்டலம்  -  வானில்  சுழலும் சூரிய, சந்திர
மண்டலம்;   தூங்கு நீர்ச் சுரிப்பு   உற வீங்க  - மிகுந்த
நீருள்ள கடலிலே சுழற்சி உண்டாகிப் பொங்கவும்; இரைக்கும்
பல்லுயிர்   யாவையும்
- ஆரவாரிக்கும் எல்லா உயிர்களும்;
நடுக்கமுற்று இரிய  - நடுங்கி நிலை கெடவும்; அனந்தன் -
ஆயிரந்   தலைகள்  கொண்ட  அனந்தன் எனும் பாம்பு; புரி
பரித்திலன்
  - உலகைத் தாங்க  முடியவில்லை; படர்  சுடர்
மணித்தலை பலவும்
 - விரிகின்ற ஒளியுடைய மணிகள் பூண்ட
பல தலைகளும்; மீது விரித்து எழுந்தனன்  - மேலே படம்
விரித்து   எழுந்தனன்; என்பது   ஓர் மெய்யான்  - என்று
தோன்றும் வகையில்   ஒப்பற்ற உடலை உடையவன் ஆனான்
(இராவணன்).
  

(30)
 

9672.

தோன்றினான் வந்து - சுரர்களோடு அசுரரே

தொடங்கி

மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வடஅனற்கு இரு மடி கனல.
 

சுரர்களோடு அசுரரே தொடங்கி- தேவர்களுடனே அசுரர்
தொடங்கி; மூன்று நாட்டினும்  உள்ளவர் யாவரும் முடிய -
மூவுலகிலும் உள்ளவர்   யாவரும் அழிய; செரு  ஊன்றினான்-
போரில்  மனம்  வைத்தான்; என்று   உயிர் உமிழ்தர உதிரம்
கான்று 
  -   என   உயிர்கள்  அழியவும்   இரத்தம் கக்கவும்;
நாட்டங்கள்- கண்கள்; வடஅனற்கு இருமடி கனல- வடவைத்
தீக்கு இருமடங்கு கொடுமையாய்த் தீ வீச.
 

தானவர் - அசுரர்   வேறு   அரக்கர்   வேறு,  இராவணன் 
அரக்கன்  ஆதலின் அவனுக்கு   அசுரர்   தேவர்   இருவரும்
எதிரிகளே. 
 

(31)