உலகில் தோன்றிய கலக்கம் கண்டு, சுக்கிரீவன் முதலியோர் துணுக்கமுறுதல் |
9673. | உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் |
| உலைவும், |
| மலையும் வானமும் வையமும் மறுகுறு மறுக்கும், |
| அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற |
| அயர்வும், |
| தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். |
|
உலகில் தோன்றிய மறுக்கமும் - இவ்வுலகில் தோன்றிய கலக்கமும்; இமைப்பிலர் உலைவும்- தேவர்களின் வருத்தமும்; மலையும் வானமும் வையமும்- மலைகளும் விண்ணும் பூமியும்; மறுகுறு மறுக்கும் - சுழலும் சுழற்சியும்; அலைகொள் வேலைகள் அஞ்சின- அலைகள் மிகுந்த கடல்கள் பயந்தனவாய்; சலிக்கின்ற அயர்வும் - சலிப்புறுகின்ற தளர்ச்சியும்; தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்- சுக்கிரீவன் முதலிய தடுக்கப்படாத வலிமையை உடையவர் எல்லோரும் பார்த்தனர். |
(32) |
9674. | 'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க, |
| வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க, |
| 'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் |
| ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார் |
|
அண்டம் பீறிற்றாம் - இவ்வுலகம் கிழிந்தது; என்பது ஓர் ஆகுலம் பிறக்க - என்று எண்ணுமாறு ஒரு தடுமாற்றம் எழ; வேறிட்டு ஓர் பெருங்கம்பலை - வேறுபட்ட ஒரு பேரொலி; பம்பி மேல் வீங்க - நெருங்கி மேலும் மிக; மாறிப் பல்பொருள் வகுக்குறும் காலத்து- அழிந்திடப் பல பொருள்களைப் படைக்கப் பெறும் பொழுதில்; மறுக்கம் ஏறிற்று - கலக்கம் மிகுதியாயிற்று; என்னை கோலோ- என்ன காரணமோ; என எழுந்தார் - என்று இராமன் படையில் எழலானார். |
(33) |
9675. | கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும், |
| திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன |
| சிவண, |