பக்கம் எண் :

 இராவணன் தேர் ஏறு படலம்273

அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும் வந்து

ஆர்க்கும்

கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார்.
 

கடல்கள் யாவையும்  -   கடல்கள்   எல்லாம்; கல்மலைக்
குலங்களும்
  - கல்வடிவான   மலைக்  கூட்டங்களும்; காரும் -
மேகமும்;   திடல்கொள்    மேருவும்   -   வலிமை  மிகுந்த
மேருமலையும்;  விசும்பிடைச் செல்வன  சிவண  - வானத்தில்
செல்வனவற்றை ஒத்திருக்க; அடல் கொள் சேனையும்- வலிமை
கொண்ட அரக்கர் படையும்; அரக்கனும் - இராவணனும்; தேரும்
வந்து ஆர்க்கும் 
-   தேரும்   வந்து  ஒலிக்கும்; கடல்கொள்
பேர்   ஒலிக்கம்பலை  என்பதும் கண்டார் 
-  கடல் போல
ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார். 
 

(34)
 

9676.

'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தி வந்து உற்றது; கொற்றவ! 

குலுங்குற்று

அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான்.
 

கொற்றவ !- வெற்றிகொண்ட இராமனே!; இராவணன் எழுந்து
வந்தனன்  
-   இராவணன் (தன் படையுடன்) புறப்பட்டு வந்தான்;
வீடணன் விரைவான்  - விரைந்து   வந்த  வீடணன்; இராக்கதர்
தானைக் கொழுந்து முந்தி வந்து உற்றது
  - அரக்கர் படையின்
முன்னணிப்படை முன்னர்   வந்தடைந்தது; நம்பலம்  குலுங்குற்று
அழுந்துகின்றது
  -   நம்படை  நடுங்கி  மூழ்குகின்றது; அமரரும்
அஞ்சி விழுந்து சிந்தினர் 
-   தேவர்களும்  பயப்பட்டுக் கீழே
விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் - எனக் கூறினான். 
 

(35)