இராமனுக்கே உரியது; உண்மை- இதுவே உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்- இனிமேல் அச்சம் உங்களை விட்டு நீங்கப் பெற்றீர்கள்; மணி பூண்ட- மணிகள் கட்டியதும்; வய மா- வலிமை கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டதும்; ஆழி- சக்கரங்கள் உடையதுமான; நிமிர்- உயர்ந்த; பொலந்தேர் - பொன்தேரினை; ஈண்ட விடுவீர்- (இராமபிரானுக்கு) விரைவில் அனுப்புவீர்களாக; என்று அரன் இசைத்தான்- என்று சிவபெருமான் கூறினான். |
(5) |
சிவன் கூற இந்திரன் கட்டளைப்படி தேர் வருதல் |
9682. | தேவர் அது கேட்டு, 'இது செயற்கு உரியது' என்றார்; |
| ஏவல் புரி இந்திரனும், அத் தொழில் இசைந்தான்; |
| 'மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக் |
| கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி' |
| என்றான். |
|
தேவர் அது கேட்டு- தேவர்கள் சிவபிரான் சொன்னதைக் கேட்டு; 'இது செயற்கு உரியது' என்றார்- 'இச் செயல் செய்வதற்கு உரியது என்று (இந்திரனிடம்) சொன்னார்கள்; ஏவல் புரி இந்திரனும்- சிவபிரான் ஏவியதைச் செய்யும் இந்திரனும்; அத்தொழில் இசைந்தான்- அந்தச் செயலைச் செய்ய ஏற்றுக்கொண்டான்; மூ உலகும் முந்தும்- மூன்று உலகங்களிலும் ஏற்பட்டுச் சிறப்பதாயும்; ஓர் கணத்தில் முற்றி- ஒரு கணத்தில் (அந்த மூவுலகங்களையும்) முழுவதாகச் சுற்றிவருவதாயும்; கோவில் புரிவேன்- சிறப்புள்ள தேரை இராமனுக்கு ஏற்ற கோவிலாகச் செய்வேன்; பொரு இல் தேர் கொணர்தி - ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என்றான்- என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான். |
வெறும் போர்த் தேராக அன்றி இராமபிரான் எழுந்தருளுவதாலும் அவதார நோக்கம் நிறைவேற்றுவதற்கு உரியதாகலானும் 'தேரைக் கோவிலாக்குவேன் என்றான். |
(6) |
மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு |
9683. | மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் |
| பூதலம் எழுந்து படல் தன்மைய பொலந் தேர்; |