| சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் |
| பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். |
|
மகோததி வளாவும் - பெருங்கடல் சூழ்ந்துள்ள; பூதலம் எழுந்து படல் தன்மைய- பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற தன்மை கொண்ட; பொலம் தேர் - பொன்மயமான தேரை; மாதலி கொணர்ந்தனன் - மாதலி கொண்டு வந்தான்; சீத மதி மண்டலமும் - குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்; ஏனை உளவும் - மற்றும் (மேல் மண்டலத்தில்) உள்ளனவும்; திண் பாதம் என - தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும் படியாக; நின்றது - (தேவர்கள் அனுப்பிய தேர் நின்றது; விசும்பில் படர்ந்தது - (தன் உயரத்தால் ஆகாயத்தின் மேல் பரவியது. |
மகா + உததி = வளாவுதல் - சூழ்தல் |
(7) |
9684. | குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் |
| கொடிஞ்சும், |
| அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும், |
| கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின் |
| வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. |
|
குலக்கிரிகள் ஏழின் வலி கொண்டு - ஏழு குல மலைகளின் வலிமையைத் தன்னிடம் கொண்டதாய்; உயர் கொடிஞ்சும் - உயர்ந்த கொடிஞ்சு என்னும் உறுப்பையும்; அலைக்கும் உயர் பாரின் வலி - (அலைகளால் இடையறாமல்) அலைக்கப்படுகின்ற நிலவுலகத்தின் வலிமை (கொண்டதுபோன்ற); ஆழியினின் அச்சும் - சக்கரத்தில் பொருந்திய அச்சினையும்; கலக்கு அற வகுத்தது - இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப் பட்டது அந்த தேர்; கதத்து அரவம் எட்டின் - சினம் கொண்ட எட்டுப் பெருநாகங்களையும்; வலக் கயிறு கட்டியது - வலிமை கொண்ட கயிறாகக் கொண்டு கட்டப்பட்டது, அந்த தேர்; வானை முட்டியது - (அத்தேர்) வானத்தையே முட்டிக்கொண்டு நின்றது. |
குலக் கிரி - உயர்வுக்கும் உயர்வான மலைகள். நல்ல பொருள்களின் மேன்மையைக் குறிக்கச் 'சாதி' என்ற அடைமொழிகொடுத்துப் பேசுவது மரபு. குலக்கிரிகள் ஏழு; கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் என்பனவாம். கச்சியப்பரின் கந்தபுராணம் இவ்வேழோடு கந்தமாதனத்தையும் |