சேர்த்துக் குலக் கிரிகள் எட்டு எனப் பேசும் (கந்த, ஆற்றுப்-16). தேர் விரைந்து செல்லும்போது அதில் இருப்போர் விழுந்துவிடாமல் நிற்பதற்குப் பற்றிக் கொள்ளும் உறுப்பினைக் கொடிஞ்சு என்பர். அரவம் எட்டு, வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன். |
(8) |
9685. | ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை |
| என்னா, |
| மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில் |
| பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை |
| நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். |
|
மீண்டனவும் மேலனவும் - கடந்தவையும் வரப்போவனவுமாகிய; ஆண்டினொடு - ஆண்டையும்; நாள், இருது, திங்கள் இவை என்னா - கிழமை, பருவம், மாதம் என்ற இவற்றின் காலப் பகுதிகளையும்; விரி தட்டில் பூண்டுளது - விரிந்த தேர்த்தட்டிலே குறிக்கப்பட்டுள்ளது; தாரகை மணி - நட்சத்திர மணிகள் கொண்டு கோத்த; பொரு இல் கோவை- ஒப்பற்ற மாலைகளையும்; புனை தாரினது - அழகு செய்யப்பட்ட மாலைகளையும் உடையது; குன்றின் நின்றுளது - மலைபோலப் பெருமிதமாகப் போர்க்களத்திலே வந்து நின்றது. |
தேர்த் தட்டிலே காலக் குறிப்புகள் அமைப்பது தொன்மையான ஒரு வழக்கமெனத் தெரிகிறது. இக்காலங்களுக்கு உரிய தெய்வங்கள் தேர்த்தட்டில் இடம் பெறும் என்ற குறிப்பினை வை.மு.கோ. தருகிறார். ''ஆண்டு முதலியன அவற்றிற்குரிய தேவதைகளையாம். தேவ மயம் அந்தேரென்க'' என்பது அவர் குறிப்பு. |
(9) |
9686. | மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் |
| கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் |
| மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப் |
| பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! |
|
மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; மணிச் சுவர்களாக- அழகிய சுவர்களாகக்கொண்டு;கோது அற வகுத்தது - (அந்தத் தேர்) குற்றமற உருவாக்கப்பட்டது; மழைக் குழுவை எல்லாம் - மேகக் கூட்டம் அனைத்தையும்; மீது உறு பதாகை என - (தேர்) மேல் கட்டப்பட்ட பெரிய கொடிகளாகக் கொண்டு; வீசியது- ஆடச் செய்தது; மெய்ம்மைப் பூதம் அவை |