பக்கம் எண் :

28யுத்த காண்டம் 

(அந்த ஆடலை மீண்டும் செய்து காட்ட) எழுந்திருக்க
மாட்டாயோ?
 

அம்புலி - சந்திரன், அம்ம - கேட்டற் பொருளைத் தழுவி
வரும்  இடைச்சொல்.  'அம்ம  கேட்பிக்கும்'  (தொல், சொல்
- 278)  இம்பர் - இவ்வுலகம்.  வம்பு - புதுமை. ஏசற்றேன் -
ஆசைப்பட்டேன். 
 

(50)
 

9236.

'இயக்கியர், அரக்கிமார்கள், விஞ்சையர் ஏழைமாதர், 

முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் 

நின்னை

மயக்கிய முயக்கம்தன்னால், மலர் அணை அமளிமீதே 

அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது 

அலசினாயோ?

 

முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர் - முயற் களங்கம்
பொருந்தாத   சந்திரனைப்  போன்ற   முகத்தினை  உடையவரான;
இயக்கியர்,  அரக்கிமார்கள்   விஞ்சையர்  ஏழை  மாதர்-
இயக்கியரும், அரக்கியரும், வித்யாதர மகளிருமான நின் மனைவியர்; 
முழுதும் நின்னை  மயக்கிய  முயக்கம் தன்னால்
- நின்னை 
முழுதுமாகத் தம்  காதலால் மயக்கிச்  சேர்ந்த  புணர்ச்சியாலாகிய 
மெலிவினால்;   மலர்  அணை  அமளிமீதே   அயர்த்தனை 
உறங்குவாயோ?
-  மலரணை  பரப்பிய  படுக்கை மீது  சோர்ந்து 
உறங்குகின்றாயோ? அமர் பொருது அலசினாயோ- (அல்லது) 
போர் செய்து இளைத்தமையால் படுத்திருக்கின்றாயோ?
 

மயக்கிய முயக்கம் - முயக்கத்தாற்  பிறந்த அவசத்தைக்
குறித்தது. ஏழையர் - பெண்கள்.  ''எருதேறி  யேழையுடனே''
(தேவா   1171-2)   அலசுதல்  -  வருந்துதல்;   இளைத்தல்.
''காதலால் உளதாகிய அயர்ச்சியும், பொருதமையால் உளதாகிய
இளைப்பும் அன்றி  அசைவறக்   கிடத்தற்குக் காரணம் வேறு
இருக்க இயலாது என்று இந்திரசித்தின் இறப்பினால் பொங்கும் 
துன்பத்தை மாற்ற முயல்கிறாள் மண்டோதரி. 
 

(51)
 

9237.

'முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும், 

புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் 

போலாம்,

மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? மான மேரு 

உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!