பக்கம் எண் :

280யுத்த காண்டம் 

ஐந்தின்  -  அழியா  நிலை கொண்ட ஐந்து பூதங்களினுடைய;
வலியின் பொலிவது - வலிமையோடு அழகாக அமைவது.
 

(அம்மா - வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்) 
 

(10)
 

9687.

மரத்தொடு மருந்து உலகில் யாவும் உள வாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து,
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை.
 

மரத்தொடு மருந்து  -  மரங்கள் மற்றும் பூண்டுகள் என; 
உலகில்   உள   யாவும் வாரி
  -  உலகில் உள்ள எல்லாப்
பொருள்களையும் வாரி    எடுத்து;  தரத்தொடு  தொடுத்த -
உயர்தரம்   கொண்டு  தொடுக்கப்பட்ட;   கொடி தாங்கியது-
கொடியைத்  தாங்கியிருப்பது;   சங்கக்கரத்தொடு தொடுத்த
கடல்
- கூட்டமாயுள்ள அலைகளோடு   பொருந்திய கடலானது;
மீது நிமிர் காலத்து  -  மேலே  பொங்கி வருகின்ற (ஊழிக்)
காலத்து;  உரத்தொடு கடுத்த கதழ் ஓசை  - வலிமையொடு
விரைவுகொண்டு உக்கிரமாக எழுப்பும் ஓசையே; அதன் ஓதை-
அந்தத் தேரின் ஓசையாகும். 
 

(11)
 

9688.

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டவை வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்,
அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின்.*
 

பண்டு- முன்னம் ஆதியிலே;அரிதன் உந்தி அயன் வந்த-
திருமாலின்   உந்தியில்   நான்முகன்  தோன்றுதற்கு இடமாகிய;
பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய  -  பழமையான 
தாமரை மொட்டைப் போன்ற; மொட்டினது - மொட்டு என்னும்
உறுப்பினை    உடையது   (அந்தத் தேர்);   பூதம் உண்டவை
வயிற்றிடை ஒடுக்கி
- பூத விகாரங்களாகிய உயிரிகளையெல்லாம்
தன் வயிற்றுள்  ஒடுக்கி; உமிழ்கிற்போன்- (மீண்டும் படைப்புக்
காலத்தில்)   உமிழ வல்லவனாகிய திருமாலின்; அண்டச மணிச்
சயனம் ஒப்பது அகலத்தில்
  - ஆதி   சேடனாகிய  அழகிய
படுக்கையை அகலத்தில் ஒத்திருப்பது. 
  

(12)