பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்281

9689.

வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர்
மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும்.
 

(அந்தத் தேரானது) வேதம் ஒரு நாலும்- நான்கு வேதங்களும்;
நிறை வேள்விகளும்  - நிறைவுடைய வேள்விகளும்; வெவ்வேறு
ஓதம் அவை ஏழும்
  - தனித்தனியாக   உள்ள  கடல்கள் ஏழும்;
மலை   ஏழும்  - ஏழு (குல) மலைகளும்; உலகு ஏழும்  - ஏழு
உலகங்களும்; பூதம் அவை ஐந்தும்  - ஐந்து   பூதங்களும்; எரி
மூன்றும்
- மூவகை அக்கினிகளும்; நனி  பொய் தீர் மா தவமும்
- மிகவும் பொய்ம்மையினின்று நீங்கிய பெருந்தவமும்; ஆவுதியும் -
(தேவர்க்கு வழங்கப்படும்) ஆகுதிகளும்; மற்றும்- மேலும்... 
 

(13)
 

9690.

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும் என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆகி நனி பூண்டது, பொலந் தேர்.
 

பொலந்தேர்  -   பொன்மயமான அந்தத் தேர்; அருங்
கரணம் ஐந்து
 - இந்திரியங்கள் ஐந்து; சுடர் ஐந்து  - ஐந்து
நெருப்புகள்; திசை நாலும் - மேலவற்றோடு நான்கு திசைகள்;
ஒருங்கு அரணம் மூன்றும்- ஒருங்கே இணைந்து செயல்பட்ட
மூன்று மதில்கள்; உழல் வாயு ஒரு பத்தும் - திரிகின்ற பத்து
வகைக் காற்றும்; பெரும்பகலும் - பெரிய  பகற்காலம்; என்று
இவை
- எனக் குறிக்கப்பட்ட இவை; பொரும் பரிகள் ஆகி-
போர்க்குணம் உடைய குதிரைகளாகி; நனி பூண்டது- நன்கு
பூணப்பட்டது.
 

வேதம்  நான்கு, பூதம் ஐந்து, கரணம் ஐந்து, புலன் ஐந்து,
திசை நாலு   இவை தெளிவு எஞ்சியவற்றின் விரிவு வருமாறு;
வேள்விகள்   ஐந்து: கடவுள்   வேள்வி,  பிரம வேள்வி, பூத
வேள்வி,   மானிட வேள்வி, தென்புலத்தார்   வேள்வி. கடல்
ஏழு:     உவர்நீர்க்      கடல்,    நெய்க்கடல்,   கருப்பஞ் 
சாற்றுக்கடல், தேன் கடல், மலை   ஏழு:   கயிலை,  இமயம்,
மந்தரம், விந்தம், நிடதம்,   ஏமகூடம்,    நீலம்   இவற்றோடு
கந்த மாதனத்தைச் சேர்த்து மலை எட்டு எனவும் உண்டு. உலகு
ஏழு: பூலோகம், தவலோகம், சத்தியலோகம், மகாலோகம், சன
லோகம், தவ லோகம், சத்திய லோகம். எரி மூன்று (வேள்வித்தீ):
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி சுடர் (நெருப்பு)
ஐந்து நான்கு திசையில்