வானுலகத்தோடு எல்லா உலகங்களும் வணங்கும்படியாக; அமலன்பால் அடைந்தது - குற்றமற்றவனாகிய இராமனிடம் வந்துசேர்ந்தது; நினைப்பும் இடை பிற்பட- எண்ணம்கூடப் பின்னடையும்படியாக; நெடுந்தேர் - அந்தப் பெரிய தேர்; நிமிர்ந்தது- உயரமாக வந்து நின்றனது. |
(16) |
தேர் கண்ட இராமன் நினைப்பும் வினாவும் |
9693. | 'அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்; |
| உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்; |
| நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா; |
| தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? |
|
அலரி- சூரியனுடைய; தனி ஆழி புனை தேர் இது எனில், அன்று - ஒற்றைச் சக்கரம் பூண்ட தேர்தான் இது எனின் அப்படி இல்லை; உலகின் முடிவில் - உலகங்களின் அழிவுக் காலத்தில் எழுகின்ற; பெரிய ஊழ் ஒளி இது அன்று - பெரிய ஊழிக் காலத்தில் தோன்றும் தீயின் ஒளிகொண்டது இது அன்று; நிலைகொள் நெடு மேரு கிரி அன்று- நிலைபேறுடைய பெரிய மேரு மலையும் அன்று; நெடிது - மிகவும் உயரமானது இது; (அம்மா என்ற சொல் வியப்புக் குறிப்பானது); தலைவர் ஒரு மூவர் - தலைவர்களாகிய ஒப்பற்ற மும்மூர்த்திகளின்; தனிமானம் இதுதானோ- சிறந்த விமானம் இதுதானோ? |
(17) |
9694. | 'என்னை இது நம்மை இடை எய்தல்?' என |
| எண்ணா, |
| மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, 'வந்தாய், |
| பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?' |
| என்றான் |
| அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: |
|
'என்னை இது நம்மை இடை எய்தல்'- இந்தத் தேர் நம்மிடம் எய்தியது ஏன் எப்படி?'; என எண்ணா - என்று எண்ணி; மன்னவர்தம் மன்னன் மகன் - மன்னர் மன்னனாகிய இராமன்; மாதலியை - மாதலியை நோக்கி; பொன்னின் ஒளிர் தேர் இது கொடு - பொன்போல் ஒளிவீசுகின்ற இந்தத் தேரைக் கொணர்ந்தது; யார் புகல- எவர் கட்டளைப்படி?'; என்றான் - |