பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்285

9697.

'கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்
உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே,
எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும் - எந்தாய்!
 

'எந்தாய்...;   கண்ணும்   மனமும்  கடிய காலும் இவை
கண்டால் 
- கண், மனம், விரைவாக இயங்குகின்ற காற்று ஆகிய
இவற்றைக்   கண்டால்;  விசையால்  -   அவற்றினும் விரைவாக;
உண்ணும் -  (இந்தத்  தேர்)  உண்டுவிடும்   (அதாவது அவற்றை
வேகத்தால் தோற்கடிக்கும்); உணர்வு பின் படர ஓடும்- அறிவுகூட
தன் பின்வருமாறு இது முன்னேறி ஓடும்; விண்ணும் நிலனும் என
விசேடம் இலது
- (இயங்குவதற்கு) ஆகாயம் நிலம் என வேறுபாடு
இல்லாதது; எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் அஃதே -
எண்ணப்படுகின்ற   பெரிய   நீரிலும்   நெருப்பிடையிலும் அதுவே
(அதாவது, இத்தேரின் இயக்கத்துக்கு நீர் நெருப்பு என்ற வேறுபாடு
இல்லை).
 

விண், மண், நீர், நெருப்பு ஆகிய எவற்றிலும் எவற்றிடையிலும்
இயங்குவது இந்தத்தேர். 
 

(21)
 

9698.

'நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின்
பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத்
தேரும் உளதே, இது அலால்? - உலகு செய்தோம்!
 

உலகு செய்தோய்  -  உலகங்களைப் படைத்தவனே!; நீரும்
உளவே அவை ஓர் ஏழு
 - ஏழு கடல்களும் உள்ளன அன்றோ?;
நிமிர்கிற்கும்   பாரும் உளவே   அதின் இரட்டி- கடல்மேல்
நிமிர்கின்ற    உலகங்களும்    ஏழு   கடல்கள்   போல இரண்டு
மடங்காக  பதினான்கு   உள்ளன   அன்றோ?; அவை  - அந்தக்
கடல்களும்   உலகங்களும்; பண்பின் பேரும் ஒரு காலை - தம்
இயல்பிலிருந்து   ஒரு   காலத்திலே   மாறுபடும்; இது அலால் -
இந்தத்   தேரைத்   தவிர; ஒரு காலும் இடை   பேராத் தேரும் 
உளதே
- ஒரு காலத்திலும்  தன் இயல்பிலிருந்து   நிலை பெயராத
தேரும் இருக்கிறதோ?' (இல்லை). 
 

(22)
 

9699.

'தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று