பக்கம் எண் :

286யுத்த காண்டம் 

ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது' என்றான்,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான்.
 

முதல்வ!  - தலைவனே!; தேவரும் முனித்தலைவரும்
சிவனும்மேல்நாள்  மூ  உலகு அளித்த    அவனும்
-
தேவர்கள், முனிவர்களின் தலைவர்கள், சிவபிரான், பண்டொரு
காலத்தில்   மூன்று   உலகங்களையும்   படைத்த நான்முகன்
ஆகியோர்; முன் நின்று ஏவினர்- முன் வந்து ஏவினார்கள்;
(அவர்களின்   கட்டளையை   ஏற்றுச்) சுரர்க்கு இறைவன்-
தேவர்களின்   அரசனான   இந்திரன்;  ஈந்துள (து) இது -
கொடுத்ததாகும்      இந்தத்தேர்';    என்றான்  -   என்று
சொல்லியவனாய்; மாவின்   மனம் ஒப்ப உணர் மாதலி -
குதிரையின்   மனப்போக்கினைப்   பொருத்தமாக  உணர்ந்து
(தேர் செலுத்த   வல்ல)  மாதலி; வலித்தான்  - சொலக்கருதி
உறுதிபடச் சென்னான். 
 

(23)
 

இராமன் ஐயமும் தெளிவும்
 

9700.

ஐயன் இது கேட்டு, 'இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கைகொல்?' எனச் சிறிது சிந்தையில் 

நினைந்தான்;

மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம்.
 

ஐயன் -  இராமபிரான்; இது   கேட்டு - மாதலி உரைத்த
இதனைக்   கேட்டு; 'இகல் அரக்கர் அகல் மாயச் செய்கை
கொல்' என
- ஒருகால் இது பகைவராகிய அரக்கர்களின் பெரிய
மாயையால்   விளைந்த   செயலோ  என்று; சிந்தையில் சிறிது
நினைந்தான்
  -   மனத்திலே  ஓரளவு  எண்ணினான்; 'அவன்
உரைத்தது  மெய்' என வேண்டி
  - அந்த மாதலி உரைத்தது
உண்மையே   எனப் புலப்பட வேண்டி இடை பூண்ட- தேரிலே
கட்டப்பட்ட; மொய்  உளை  வயப் பரி- செறிந்த பிடரி மயிர்
கொண்ட     வலிய   குதிரைகள்; முது வேதம் மொழிந்த -
பழமையான வேதங்களை ஓதின. 
 

(24)

9701.

'இல்லை இனி ஐயம்' என எண்ணிய இராமன்,
நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன,