பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்29

முக்கணான்   முதலினோரை -  சிவபிரான்  முதலிய
முத்தேவர்களுடன்;  உலகொரு  மூன்றினோடும் - மூன்று
உலகங்களோடும்;  புக்கபோர் எல்லாம் வென்று நின்ற -
உண்டான போர்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு நின்ற;
என் புதல்வன் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் 
போலாம்
- என்  மகன்  மானிடரில்  ஒருவன்  கொல்ல 
இறப்பவனோ?  மானமேரு உக்கிட அணு  ஒன்று ஓடி
(இந்நிகழ்ச்சி) பெருமையை உடைய மேரு மலை சிதறும்படி 
ஓர் அணு ஓடிச்சென்று; உதைத்தது போலும் அம்மா!
'உதைத்தது' என்று  சொல்லுவது  போல உள்ளது! என்னே 
வியப்பு!
 

போலாம் - உரையசை, அம்மா - வியப்பிடைச் சொல்.
 

(52)
 

9238.

'பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை  

எல்லாம்

வெஞ் சின மனிதர் கொல்ல, விளிந்ததே; 

மீண்டது இல்லை;

அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று 

அமுதால் செய்த

நஞ்சினால், இலங்கை வேந்தன் நாளை இத் 

தகையன் அன்றோ?'

 

பஞ்சு எரி உற்றது என்ன- பஞ்சுப்  பொதியில் நெருப்புப்
பற்றி எரிந்தது என்னுமாறு; அரக்கர்  தம் பரவை எல்லாம்-
அரக்கர்   தம்   படைக்கடல்   எல்லாம்;   வெஞ்சின  மனிதர்
கொல்ல
- கொடிய கோபத்தை உடைய  (இரு) மனிதர் - கொல்ல;
விளிந்ததே,  மீண்டது   இல்லை- இறந்ததே   அன்றி  உயிர்
மீண்டது இல்லை! அச்சீதை என்று அமுதால் செய்த நஞ்சினால்
- அந்தச்   சீதை  என்ற   பெயரை  உடைய அமிழ்தினால் செய்த
நஞ்சினால்; இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ-
இலங்கைக்கு  அரசனாகிய   இராவணன்  நாளைக்கு  இத்தகையன்
(இறந்து  பட்டவன்)   அன்றோ?  அஞ்சினேன்! அஞ்சினேன்! -
(ஆதலால்) அஞ்சினேன் அஞ்சினேன்!
 

தன் கணவன் மேல் குற்றம் காணாளாய், சீதையை அமுதாகத்
தோன்றிய நஞ்சு என்றாள். தன் கணவன் கண்களுக்கு அமுதெனத்
தோன்றியதனாலன்றோ அவன் கொணர்ந்தான் என்றபடி, இனி