(இராமனுக்குத்) தேரை நல்கினர்; அரிந்தமன் வெல்லும் - பகைவரை அடக்கும் (ஆற்றல் மிக்க) மன்னவனாகிய இராமபிரான் வெல்லுவான்,; என்றற்கு - என்று கருதுவதற்கு; ஐயுறவு இல்- எவ்வித ஐயமும் இல்லை'; என்று அஞ்சார்- என்று கூறி அச்சம் நீங்கியவர்களாய்; திரிந்தனர் - (மீண்டும் போர்க்களம் எங்கும்) சுற்றி வந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர் - மரங்களையும் கற்களையும் (அரக்கர் மேல்) எறிந்தனர்; முழக்கின் பெற்றி - (அப்போது) வானரர்கள் செய்த ஆரவாரத்தின் தன்மையானது;'திசையொடு அண்டம் பிரிந்தன கொல்' - 'திசைகளும் அண்டங்களும் பிளந்தன போலும்'; என்று எண்ணப் பிறந்தது - என்று கருதும்படி எழுந்தது. |
(4) |
பலவகை ஒலிகள் |
9708. | வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் |
| ஓதை, |
| போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் |
| ஓதை, |
| ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், |
| இருவர் ஆடல் |
| தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு |
| செய்த. |
| |
வார்ப்பொலி முரசின் ஓதை - வார்க்கட்டமைந்த முரசுகளிலிருந்து எழும் ஓசையும்;வாய்ப்புடை வயவர் ஓதை- போரியற்றும் வாய்ப்புபெற்ற வீரர்கள் எழுப்பும் ஓசையும்; போர்த் தொழில்களத்து - போர் நிகழுகின்ற களத்தில்; மற்றும் முற்றிய பொம்மல் ஓதை - பிற போர்ப்படைகள் நிரம்பி நின்று எழுப்பிய மகிழ்ச்சி ஆரவார ஓசையும்; ஆர்த்தலின் - கூடியொலித்தலால்; யாரும் - (இரு திறத்திலுமுள்ள) அனைவரும்; பார்வீழ்ந்து அடங்கினர்- தரையில் விழுந்து அடங்கிப் போயினர்; இருவர் - இராமபிரான் இராவணன் என்னும் இருவருடைய; ஆடல் தேர்க்குரல்- அசைகின்ற தேர்களின் ஒலி; ஓதை பொங்க - முழக்கம் மேலெழுந்து; செவி முற்றும் செவிடு செய்த - அனைவர்தம் செவிகளையும் செவிடாக்கின. |
(5) |