பக்கம் எண் :

294யுத்த காண்டம் 

'வள்ளல்!  - வரையாது  அருளும் இயல்புடையாய்!; நின்
கருத்தும் 
- உன்   திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும்-
புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் -
பகைவரது    உட்கருத்தையும்; மிகையும்   -  பகைவர்  தம்
மிகுதியையும்; உற்ற    குற்றமும்   -   (அதனால்)   நேரும்
தீமைகளையும்;    உறுதிதானும்  -   மேற்கொள்ளத்   தக்க
உறுதியையும்;   கள்ளமில்   காலப்பாடும் - வஞ்சனையின்றி
(இயல்பாகச்)   செயல்படும்   கால  நிலையையும் கருமமும் -
எடுத்துக்கொண்ட   செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில்-
(ஆராய்ந்து) என் தொழிலைச்   செய்யேனாகில்; என் விஞ்சை
- என்   தேரோட்டும்   கலைத்தொழில்; தெள்ளிது- மிக மிகத்
திறம்பட்டது அன்றோ?' (ஆகாது என்றபடி!); என்றான் - என்று
கூறினான்;   அமலனும் - (யாதுமோர்) குற்றமற்ற இராமபிரானும்;
செவ்விது என்றான்- (அவன்  செப்பிய பாங்குணர்ந்து) 'நன்று'
என மொழிந்தான். 
 

(7)
 

இராவணனிடம் மகோதரன் வேண்டுதல்
 

9711.

'தோன்றினன் இராமன், ஈதால், புரந்தரன் துரகத்

தேர்மேல்;

ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது;

இடையே, யான் ஓர்

சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை

ஈண்டு' என்றான் -

வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை

மன்னை.

 

வான் தொடர் குன்றம் அன்ன - வானத்தை அளாவிய
மலை   போன்ற   (தோற்றத்தை    உடைய);  மகோதரன்  
மகோதரனாகிய வீரன்; எந்தாய்- எம் தலைவனே; புரந்தரன் -
இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல்  - குதிரைகள்    பூட்டிய
தேரின்   மீது;  இராமன் தோன்றினன்   - இராமன் (இதோ)
காட்சி   தருகின்றான்;   ஏன்று  - (ஒருவரை ஒருவர்) எதிர்த்து
நிற்கும்;     இருவருக்கும்  - உங்கள்     இருவரிடையேயும்;
வெம்போர் எய்தியது  -  கொடிய   போர் (நடக்கும் நேரம்)
நெருங்கி விட்டது; இடையே - உங்கள் இருவருக்கும் இடையே;
யான்   ஓர் சான்று என  - நான்  ஒரு சாட்சியாக; நிற்றல்-
(வறிதே) நிற்பது;      குற்றம்   -    பிழையாகும்;   ஈண்டு -
இப்போது; விடை தருதியால் - (வேறிடத்தில் போர் புரிய)