'வள்ளல்!   - வரையாது  அருளும் இயல்புடையாய்!; நின் கருத்தும்   - உன்   திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும்- புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் - பகைவரது     உட்கருத்தையும்; மிகையும்   -   பகைவர்  தம் மிகுதியையும்; உற்ற     குற்றமும்   -   (அதனால்)   நேரும் தீமைகளையும்;     உறுதிதானும்  -   மேற்கொள்ளத்    தக்க உறுதியையும்;   கள்ளமில்    காலப்பாடும் - வஞ்சனையின்றி (இயல்பாகச்)    செயல்படும்   கால  நிலையையும் கருமமும் - எடுத்துக்கொண்ட    செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில்- (ஆராய்ந்து) என் தொழிலைச்    செய்யேனாகில்; என் விஞ்சை - என்    தேரோட்டும்   கலைத்தொழில்; தெள்ளிது- மிக மிகத் திறம்பட்டது அன்றோ?' (ஆகாது என்றபடி!); என்றான் - என்று கூறினான்;    அமலனும் - (யாதுமோர்) குற்றமற்ற இராமபிரானும்; செவ்விது என்றான்- (அவன்   செப்பிய பாங்குணர்ந்து) 'நன்று'  என மொழிந்தான்.     | 
(7)    | 
இராவணனிடம் மகோதரன் வேண்டுதல்    | 
9711.  | 'தோன்றினன் இராமன், ஈதால், புரந்தரன் துரகத் | 
 | தேர்மேல்;  | 
 | ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; | 
 | இடையே, யான் ஓர்  | 
 | சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை | 
 | ஈண்டு' என்றான் -  | 
 | வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை | 
 | மன்னை.  | 
|   | 
வான் தொடர் குன்றம் அன்ன - வானத்தை அளாவிய மலை   போன்ற   (தோற்றத்தை     உடைய);  மகோதரன்  -  மகோதரனாகிய வீரன்; எந்தாய்- எம் தலைவனே; புரந்தரன் - இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல்   - குதிரைகள்    பூட்டிய தேரின்    மீது;  இராமன் தோன்றினன்   - இராமன் (இதோ) காட்சி    தருகின்றான்;   ஏன்று  - (ஒருவரை ஒருவர்) எதிர்த்து நிற்கும்;      இருவருக்கும்  - உங்கள்     இருவரிடையேயும்; வெம்போர் எய்தியது   -  கொடிய   போர் (நடக்கும் நேரம்) நெருங்கி விட்டது; இடையே - உங்கள் இருவருக்கும் இடையே; யான்    ஓர் சான்று என  - நான்  ஒரு சாட்சியாக; நிற்றல்- (வறிதே) நிற்பது;       குற்றம்   -    பிழையாகும்;    ஈண்டு - இப்போது; விடை தருதியால் - (வேறிடத்தில் போர் புரிய)   |