விடை   தருவாயாக'; என்றான் - என வேண்டினான்; இலங்கை மன்னை - (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம்.     | 
(8)    | 
இராவணன் கட்டளை    | 
9712.  | 'அம்புயம் அனைய கண்ணன்தன்னை யான் அரியின்  | 
 | ஏறு  | 
 | தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; | 
 | தொடர்ந்து நின்ற  | 
 | தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்' | 
 | என்றான்;  | 
 | வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்' என்று, | 
 | அவனின் மீண்டான்.  | 
|   | 
(இவ் வேண்டு    கோளைக் கேட்ட இராவணன்), அம்புயம் அனைய கண்ணன் தன்னை - செந்தாமரை போன்ற கண்களை  உடைய   இராமனை; அரியின் ஏறு - ஆண்   சிங்கம் (ஒன்று); தும்பியைத்    தொலைத்தது  என்ன - யானையை அழித்தது என்னும்    படியாக;   யான்     தொலைக்குவன்   -  நான்  அழித்தொழிப்பேன்;   தொடர்ந்து நின்ற  தம்பியை - இணை  பிரியாது   நிற்கும் தம்பியாகிய  இலக்குவனை; தடுத்தியாயின் -  (நீ) போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை - (எனக்கு) வெற்றித்   தேடித் தந்தவனாவாய்; என்றான் - என்று கூறினான்; வெம்பு இயல் அரக்கன்- (சினத்தால்) வெம்பும்  தன்மையுடைய மகோதரன்; 'அஃதே செய்வென் என்று- 'அவ்வாறே செய்வேன்' என்று; அவனின் மீண்டான்- இராவணனிடத்தினின்றும் திரும்பிச் சென்றான்.      | 
(9)    | 
இடையே இராமன் தேர் அணுக சாரதிக்கு மகோதரன் இட்ட கட்டளை    | 
9713.  | மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா | 
 | முன்னம்,  | 
 | ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; | 
 | அணுகும்காலை,  | 
 | மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, | 
 | 'முட்டத்  | 
 | தூண்டுதி தேரை' என்றான்; சாரதி தொழுது  | 
 | சொன்னான்:  |