விடை தருவாயாக'; என்றான் - என வேண்டினான்; இலங்கை மன்னை - (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம். |
(8) |
இராவணன் கட்டளை |
9712. | 'அம்புயம் அனைய கண்ணன்தன்னை யான் அரியின் |
| ஏறு |
| தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; |
| தொடர்ந்து நின்ற |
| தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்' |
| என்றான்; |
| வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்' என்று, |
| அவனின் மீண்டான். |
| |
(இவ் வேண்டு கோளைக் கேட்ட இராவணன்), அம்புயம் அனைய கண்ணன் தன்னை - செந்தாமரை போன்ற கண்களை உடைய இராமனை; அரியின் ஏறு - ஆண் சிங்கம் (ஒன்று); தும்பியைத் தொலைத்தது என்ன - யானையை அழித்தது என்னும் படியாக; யான் தொலைக்குவன் - நான் அழித்தொழிப்பேன்; தொடர்ந்து நின்ற தம்பியை - இணை பிரியாது நிற்கும் தம்பியாகிய இலக்குவனை; தடுத்தியாயின் - (நீ) போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை - (எனக்கு) வெற்றித் தேடித் தந்தவனாவாய்; என்றான் - என்று கூறினான்; வெம்பு இயல் அரக்கன்- (சினத்தால்) வெம்பும் தன்மையுடைய மகோதரன்; 'அஃதே செய்வென் என்று- 'அவ்வாறே செய்வேன்' என்று; அவனின் மீண்டான்- இராவணனிடத்தினின்றும் திரும்பிச் சென்றான். |
(9) |
இடையே இராமன் தேர் அணுக சாரதிக்கு மகோதரன் இட்ட கட்டளை |
9713. | மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா |
| முன்னம், |
| ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; |
| அணுகும்காலை, |
| மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, |
| 'முட்டத் |
| தூண்டுதி தேரை' என்றான்; சாரதி தொழுது |
| சொன்னான்: |