மீண்டவன்  -  இராவணன்   பக்கமிருந்து  திரும்பி வந்த மகோதரன்; இளவல் நின்ற பாணியின்  -  தம்பி இலக்குவன் இருந்த   பக்கத்திற்கு; விலங்கா  முன்னம்  -  நீங்குவதற்கு முன்னர்; ஆண்டகை  -  ஆண்மை   மிக்க   இராமனுடைய; தெய்வத்திண்தேர்  - தெய்வத்   தன்மை மிக்க வலிமையான தேர்; அணுகியது  -  நெருங்கி  வந்தது; அணுகும் காலை - அவ்வாறு   நெருங்கிய  போது;   மகோதரன்  -  மகோதரன்;  மூண்டெழு வெகுளியோடும் - பொங்கி எழுகின்ற சினத்தோடு; முனிந்து - கோபித்து; 'முட்டத்தூண்டுதி தேரை'  -   தேரை  முட்டும்படி செலுத்துவாயாக; என்றான்- என்று கட்டளையிட்டான்; சாரதி- தேர்ப்பாகன்; தொழுது சொல்லும்- வணங்கி உரைக்கத் தொடங்கினான்.     | 
(10)    | 
9714.  | 'எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், | 
 | இன்று  | 
 | நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது | 
 | அல்லால்?  | 
 | அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் | 
 | அன்ன  | 
 | கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்' | 
 | என்றான்.  | 
|   | 
ஐய  - ஐயனே; அண்ணல்  தன்  தோற்றம் கண்டால் -  பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால்; எண்ணரும் கோடி வெங்கண் இராவணரேயும்  -  (இந்த  ஓர்  இராவணன் மட்டுமன்று)   எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான  கொடுங்கண்கள் படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது- இன்று (இராமனை)   நெருங்கி   வந்தாலும்; கிடப்பதல்லால்- (களத்தில்) இறந்து   கிடப்பார்களே யல்லாமல்;   மீண்டும்   நடப்பரோ?- (உயிருடன்)    மீண்டும்   செல்ல   வல்லவர்களோ?  (செல்லார்) ஆதலால்; நீ- நீ; கமலம் அன்ன கண்ணனை- தாமரை போலும் கண்களையுடைய   இராமபிரானை;   அப்பால் ஒழிய  - (விட்டு நீங்கி) வேறிடம்; செல்வதே- போவதே; கருமம் - (பொருத்தமான) செயல்; என்றான்- என்று (சாரதி மகோதரனிடம்) கூறினான்.     | 
(11)    | 
9715.  | என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடித்து, 'அடா! | 
 | எடுத்து நின்னைத்  | 
 | தின்றனென்எனினும் உண்டாம் பழி' என, சீற்றம் | 
 | சிந்தும்  |