பக்கம் எண் :

296யுத்த காண்டம் 

மீண்டவன்  -  இராவணன்   பக்கமிருந்து  திரும்பி வந்த
மகோதரன்; இளவல் நின்ற பாணியின்  -  தம்பி இலக்குவன்
இருந்த   பக்கத்திற்கு; விலங்கா  முன்னம்  -  நீங்குவதற்கு
முன்னர்; ஆண்டகை  -  ஆண்மை   மிக்க   இராமனுடைய;
தெய்வத்திண்தேர்  - தெய்வத்   தன்மை மிக்க வலிமையான
தேர்; அணுகியது  -  நெருங்கி  வந்தது; அணுகும் காலை -
அவ்வாறு   நெருங்கிய  போது;   மகோதரன்  -  மகோதரன்; 
மூண்டெழு வெகுளியோடும்
- பொங்கி எழுகின்ற சினத்தோடு;
முனிந்து - கோபித்து; 'முட்டத்தூண்டுதி தேரை'  -   தேரை 
முட்டும்படி செலுத்துவாயாக; என்றான்- என்று கட்டளையிட்டான்;
சாரதி- தேர்ப்பாகன்; தொழுது சொல்லும்- வணங்கி உரைக்கத்
தொடங்கினான். 
 

(10)
 

9714.

'எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும்,

இன்று

நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது

அல்லால்?

அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம்

அன்ன

கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்'

என்றான்.

 

ஐய  - ஐயனே; அண்ணல்  தன்  தோற்றம் கண்டால்
பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால்; எண்ணரும்
கோடி வெங்கண் இராவணரேயும்
  -  (இந்த  ஓர்  இராவணன்
மட்டுமன்று)   எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான  கொடுங்கண்கள்
படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது- இன்று
(இராமனை)   நெருங்கி   வந்தாலும்; கிடப்பதல்லால்- (களத்தில்)
இறந்து   கிடப்பார்களே யல்லாமல்;   மீண்டும்   நடப்பரோ?-
(உயிருடன்)    மீண்டும்   செல்ல   வல்லவர்களோ?  (செல்லார்)
ஆதலால்; நீ- நீ; கமலம் அன்ன கண்ணனை- தாமரை போலும்
கண்களையுடைய   இராமபிரானை;   அப்பால் ஒழிய  - (விட்டு
நீங்கி) வேறிடம்; செல்வதே- போவதே; கருமம் - (பொருத்தமான)
செயல்; என்றான்- என்று (சாரதி மகோதரனிடம்) கூறினான். 
 

(11)
 

9715.

என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடித்து, 'அடா!

எடுத்து நின்னைத்

தின்றனென்எனினும் உண்டாம் பழி' என, சீற்றம்

சிந்தும்