| குன்று அன தோற்றத்தான்தன் கொடி நெடுந் |
| தேரின் நேரே |
| சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, |
| திமிலத் திண் போர். |
| |
என்றலும் - என்று (சாரதி) கூறுதலும்; (மகோதரன்) எயிற்றுப் பேழ்வாய் மடித்து - (கோரைப்) பற்கள் தோன்றும் பிளந்த தன் வாயை மடித்து; 'அடா - ஏடா!; நின்னை எடுத்து - என்னை மறுத்துப் பேசிய) உன்னை வாரியெடுத்து; தின்றனன் எனினும் - உண்டேனாயினும்; பழிஉண்டாம்' - அதனால் எனக்குப் பழி நேர்ந்துவிடும்' (ஆதலால் அது தவிர்ந்தேன்); என - என்றுரைக்க; சீற்றம் சிந்தும் - சினத்தை வெளியிடும்; குன்றன தோற்றத்தான் தன் - மலை போன்ற உருவத்தையுடைய (மகோதரனின்); கொடி நெடுந்தேரின் நேரே - கொடிகள் கட்டிய இரதத்திற்கு நேராக; அவ்விராமன் திண்தேர் சென்றது - அந்த இராமபிரானுடைய வலிய தேர் சென்றது; திமிலத் திண்போர்- முழக்கத்தையுடைய பெரும் போர்; விளைந்தது- உண்டாயிற்று. |
(12) |
இராமன் - மகோதரன் போர் |
9716. | பொன் தடந்தேரும், மாவும், பூட்கையும், புலவு உண் |
| வாட்கைக் |
| கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் |
| எல்லாம் |
| வற்றின, இராமன் வாளி வடஅனல் பருக; வன் தாள் |
| ஒற்றை வன் தடந் தேரோடும் மகோதரன் ஒருவன் |
| சென்றான். |
| |
(அப்போரில் மகோதரனிடமிருந்த) பொன் தடந்தேரும்- பொன் மயமான பெரிய தேர்களும்; மாவும் - குதிரைகளும்; பூட்கையும் - யானைகளும்; புலவு வாட்கை - புலால் நாறும் வாளேந்திய கரங்களையும்; கல் தடந் திண் தோள் ஆளும் - கல்போல் வலிய அகன்று திரண்ட தோள்களையும் உடைய காலாட் படைகளும்; நெருங்கிய - (கொண்டு) நெருக்கமுற்ற; கடல்கள் எல்லாம்- படைக் கடல்கள் யாவும்; இராமன் வாளி வடவனல் பருக - இராமபிரானின் அம்புகள் என்னும் வடவைக் கனல் குடிக்க; வற்றின- வறண்டு (ஏதுமில்லாமல்) போயின |