பக்கம் எண் :

298யுத்த காண்டம் 

(எனவே);   ஒற்றை   வன் தடந் தேரோடும்- (மிஞ்சிய) தன்
ஒரே பெரிய வலிய தேருடன்; வன்தாள் மகோதரன்  - வலிய
(கால்களை உடைய) வனாகிய மகோதரன்; ஒருவன் சென்றான்-
தன்னந்தனியாக இராமபிரான் பக்கம் சென்றான். 
 

(13)
 

9717.

அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத்

தேர்மேல்,

குசை உறு பாகன்தன்மேல், கொற்றவன் குவவுத்

தோள்மேல்,

விசை உறு பகழி மாரி வித்தினான்; 

விண்ணினோடும்

திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல்

செய்தான்.

 

(மகோதரன்), அசனி  ஏறு இருந்த கொற்றக் கொடியின்
மேல்
 - (இராமபிரானுக்கு  இந்திரன்  அளித்த  தெய்வத் தேர் 
மீது பறந்த) பேரிடி   எழுதப் பெற்றிருந்த வெற்றிக்  கொடியின்
மீதும்; அரவத் தேர் மேல்  -   ஒலிமிக்க அத்தேரின் மீதும்;
குசை உறு பாகன் தன் மேல்- கடிவாளம் பற்றிய தேர்ப்பாகன்
மாதலி   மீதும்;   கொற்றவன்   குவவுத்   தோள்  மேல்-
வெற்றியாளனாகிய   இராமபிரானின்   மலைத் தோள்கள் மீதும்;
விசை உறு பகழி மாரி  - வேகம் கொண்ட அம்பு  மழையை;
வித்தினான்  - விதை தூவுவது போல்  பாய்ச்சினான்; (மேலும்)
விண்ணினோடும்  திசைகளும் கிழிய  - வானும் திசைகளும்
கிழிந்து  போயிற்றென்னுமாறு; ஆர்த்தான்  - முழக்கமிட்டான்;
தீர்த்தனும்- தூயவனாகிய இராமபிரானும்; முறுவல் செய்தான்
- புன்னகை பூத்தான். 
 

(14)
 

9718.

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம்

ஓர் ஒன்றால்,

கல் ஒன்று தோளும்ஒன்றால், கழுத்து ஒன்றால்,

கடிதின் வாங்கி,

செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி 

வந்த

சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன்,

அரக்கன் துஞ்சி.