பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்299

ஐயன்  - இராமபிரான்; வில்  ஒன்றால்  -   (மகோதரனின்)
வில்லை ஒரு கணையாலும்; கவசம் ஒன்றால் - அவன்  கவசத்தை
ஒரு கணையாலும்; விறலுடைக்கரம்- வலிமைமிக்க அவன் கைகளை;
ஓர் ஒன்றால்  - ஒவ்வொரு கணையாலும்; கல்லொன்று தோளும்
ஒன்றால்
  -   கற்பாறை   போன்ற தோள்களை ஒரு கணையாலும்;
கழுத்து ஒன்றால் - கழுத்தினை  ஒரு கணையாலும்; செல் ஒன்று
கணைகள்   கடிதின் வாங்கி
  - விரைவு பொருந்திய அம்புகளை
வேகமாய்; சிந்தினான்- செலுத்தினான்; அரக்கன் - இராட்சதனான
மகோதரன்; செப்பி   வந்த சொல் ஒன்றாய் - (இராவணனிடம்)
செப்பி   வந்த மொழி ஒன்றாகவும்; செய்கை ஒன்றாய்  - செயல்
மற்றொன்றாகவும் ஆகும் வண்ணம்; துஞ்சி துணிந்தனன்- இறந்து
உடல் துண்டாகி வீழ்ந்தான். 
 

(15)
 

இராவணனோடு இராமன் போரிடுதல்
 

9719.

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன்

கண்டான்,

சேதனை உண்ணக் கண்டான்; 'செல விடு, செல

விடு!' என்றான்;

சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரகத் திண் 

தேர்.

 

மோதரன் முடிந்த வண்ணம் - மகோதரன் இறந்த நிலையை;
மூவகை   உலகத்தோடு   -  மூன்று  உலகங்களோடு;  மாதிரம்
எவையும் வென்ற
  - திசைகள் அனைத்தையும் வெற்றி கொண்ட;
வன்தொழில் அரக்கன்  - கொடுமையே தன்மையாகக் கொண்ட
இராவணன்;    கண்டான்  -  பார்த்தான்; சேதனை   உண்ண-
(இந்நிகழ்ச்சி) தன்   அறிவை  உண்ணவே;  செலவிடு, செலவிடு
என்றான் 
-  (தன்  பாகனை   நோக்கி)   தேரைச்   செலுத்து,
செலுத்து  என்றான்; துரகத் திண்தேர்  - குதிரை பூட்டிய வலிய
தேர்;   சூதனும் முடுகித்   தூண்ட  - தேர்ப்பாகனும் விரைந்து
தூண்ட; சென்றது- வேகமாக முன்னே சென்றது. 
 

(16)
 

9720.

'பனிப் படாநின்றது என்னப் பரக்கின்ற சேனை

பாறித்

தனிப்படான்ஆகின் இன்னம் தாழ்கிலன்' என்னும் 

தன்மை