சொல்லினார்- 'உன் மகன் இன்று இல்லாமற் போனான்' என்று இராவணனிடம் கூறினர். |
இல்லை ஆயினன் - இறந்தான் என்று மங்கலமல்லாத சொல்லைச் சொல்லுதற்கு அஞ்சி இங்ஙனம் சொல்லினர். |
(3) |
9189. | மாடு இருந்த வர மாதவர், வானவர், |
| ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும், |
| 'வீடும், இன்று, இவ் உலகு' என விம்முவார், |
| ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர். |
|
மாடு இருந்த வரமாதவர் வானவர்- (தூதர் சொன்னபோது) இராவணன் அருகில் இருந்தவர்களாகிய பெருந்தவமுடையவர்களும், தேவர்களும்; ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்- ஆடும் இயல்பினராகிய நுண்ணிய இடையையுடைய பெண்டிரும் மற்றும் யாவரும்; வீடும், இன்று, இவ்உலகு' என விம்முவார்- 'இவ்வுலகம் இன்று அழியும்' எனப் புலம்பி; ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர் - ஓடி எங்கும் சிதறி ஒளித்துக் கொண்டனர். |
மாடு - பக்கம், வீடுதல் - அழிதல், விம்முதல் - தேம்பிப் புலம்புதல். |
(4) |
தூதரை இராவணன் வாளால் வீசுதல் |
9190. | சுடர்க் கொழும் புகை தீ விழி தூண்டிட, |
| தடற்று வாள் உருவி, தரும் தூதரை |
| மிடற்று வீசல் உறா, விழுந்தான்அரோ - |
| கடல் பொருந் திரைபோல் கரம் சோரவே. |
|
விழி கொழும்புகை சுடர்த்தீ தூண்டிட- (இராவணன்) கண்கள் கொழுவிய புகையையும் ஒளி வாய்ந்த சின நெருப்பினையும் கக்க; தடற்று வாள் உருவி தரும் தூதரை- தன் உறையிலிருந்த வாளை உருவித் துன்பச் செய்தியைக் கொணர்ந்த தூதரை; மிடற்று வீசல் உறா, பெரும் கடல் திரைபோல்- கழுத்தின்கண் வீசத் தொடங்கி பெரிய கடல் அலைகள் போல்; கரம் சோரவே விழுந்தான் - இருபது கரங்களும் சோர்ந்து விழுந்தான். |
தடறு - உறை. 'தடற்றிடங்கொள்வாள்' (களவழி - 18) |
(5) |