| நுனிப் படாநின்ற வீரன், அவன் ஒன்றும் |
| நோக்காவண்ணம் |
| குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் |
| கொன்றான். |
| |
பனிப்படா நின்றது என்ன - பனி எங்கும் பொழிந்து நின்றாற்போல; பரக்கின்ற சேனை - விரிந்திருக்கிற (இராவணன்) படை; பாறி - சிதறி; தனிப்படான் ஆகின்- தான் தன்னந் தனியனாகாதவரை; இன்னம் தாழ்கிலன் - (இவ்விராவணன்) இன்னும் கீழடங்கமாட்டான்; என்னும் தன்மை - என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன்- நன்கு சிந்தித்து அறிந்த வீரனான இராமபிரான்; அவன் ஒன்றும் நோக்கா வண்ணம்- தன் செயல் ஒன்றையும் அவன் காணாதபடி; குனிப்படா நின்ற வில்லால்- வளைந்த வில்லால்; ஒல்லையில் - விரைவாக; நூறிக் கொன்றான் - சின்னா பின்னமாக்கி அழித்தான். |
(17) |
9721. | அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் |
| அழுந்த, மண்டும் |
| கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து |
| உடற்றும்காலை, |
| வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப மானச், |
| சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த |
| பொன்-தோள். |
| |
அப்போழ்து - அவ்வேளையில்; அடல்வலி அரக்கற்கு- மிகுந்த ஆற்றலையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த- அண்டங்கள் அனைத்தும் தாழவும்; மண்டும் கடல்களும் வற்ற- நிறைந்த கடல்கள் எல்லாம் வற்றவும்; வெற்றிக்கால் - (எல்லாவற்றையும்) வென்று தீர்க்கும் (ஊழிக்) காற்று; கிளர்ந்து- பொங்கி யெழுந்து; உடற்றும் காலை - துன்புறுத்தும் பொழுது; வடவரை முதல ஆன - மேரு மலை முதலாக உள்ள; மலைக்குலம் சலிப்ப மான- பெருமலை வரிசைகள் அசைவன போன்று; சுடர்மணி வலயம் சிந்த- ஒளிவீசும் மாணிக்கங்கள் பதித்த வாகுவலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன்தோள் துடித்தன - இடதுபுறத்துப் பொன்மயமான தோள்கள் துடித்தன. |
(18) |