எழுது வீணை கொடு - வரையப் பெற்ற வீணையைச் (சின்னமாகக்) கொண்டு,; ஏந்து பதாகை மேல் - உயர்ந்து நிற்கும் (இராவணன்) கொடியின் மீது; கழுகும் காகமும் மொய்த்தன - கழுகுகளும் காகங்களும் சூழ்ந்து பறந்தன; ஓடு இகல் ஆடல் மா - பாயும் இயல்புடைய போர் வல்ல குதிரைகளின்; கண்கள் நீர் ஒழுகுகின்றன - கண்களில் கண்ணீர் வார்ந்து கொண்டிருந்தன; சூழி மா - முகபடாமணிந்த யானைகள்; தொழுவில் நின்றன போன்றன - பந்திகளில் கட்டப்பட்டாற்போல் செயலற்று நின்றன. |
(21) |
9725. | இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய் |
| துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும், |
| அன்னது ஒன்றும் நினைந்திலன், 'ஆற்றுமோ, |
| என்னை வெல்ல, மனித்தன்?' என்று எண்ணுவான்.* |
| |
இமையவர்க்கு இன்பம் செய் - தேவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிற; துன்னிமித்தங்கள் - (இராவணனுக்கு) கெட்ட சகுனங்களானவை; இன்னவாகி- இப்படிப்பட்டனவாகி; தோன்றின - புலப்படலாயின; தோன்றவும் - அவ்வாறு புலப்படவும்; அன்னது ஒன்றும் நினைந்திலன் - அவை குறித்தும் ஏதும் சிந்திக்காதவனாய்; 'என்னை வெல்ல மனித்தன் ஆற்றுமோ?' - என்னை வெல்வதற்கு (எளிய) மனிதனால் முடியுமோ?'; என்று எண்ணுவான் - என்று இராவணன் கருதலானான் |
(22) |
9726. | வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர் |
| ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல், |
| தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம் |
| நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். |
| |
வேலை நீர் ஓங்கு நாளின்- கடல் நீர் பொங்கியெழும் (ஊழிக்) காலத்தில்; ஒதுங்கும் உலகுபோய் - இரு புறமாய் ஒதுங்கி நிற்கும் நிலம் போல; இருபாலும் நெருங்கினார் - இருபக்கங்களிலும் நெருக்கமாகக் கூடியவர்கள்; வீங்கு தேர் செலும் வேகத்து- (இராவணனின்) வேகம் மிக்க தேர் ஓடும் விரைவினால்; தாங்கல் ஆற்றகிலார் - (அவ்விரைவைத்) தாங்குதற்கு ஆற்றாதவர்களாய்; தடுமாறி - நிலை குலைந்து; நீங்கினார்- ஒதுங்கிக் கொண்டனர். |
(23) |