எதிர் எதிரே நிற்கும் இராம இராவணர் தோற்றம் |
9727. | கருமமும் கடைக்கண் உறு ஞானமும், |
| அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும், |
| பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத் |
| தருமமும் எனச் சென்று, எதிர் தாக்கினார். |
| |
(இராவணனும் இராமபிரானும் அங்கு); கருமமும்- வினையும்; கடைக்கண் உறு ஞானமும் - (நன்னெறியின்) கடைசியில் எய்தும் ஞானமும் (போலவும்); அருமை சேரும் அவிஞ்சையும்- (பொருள்களின் நிலையை) அறியாது தடுக்கும் அவிச்சையும்; விஞ்சையும் - (அதற்கு மாறான) வித்தையும் (போலவும்); பெருமை சால்- அளவிற் பெரிய; கொடும் பாவமும் - கொடிய பாவமும்; பேர்கலா - (எந்நிலையிலும்) பயன்தருதலில் தவிராத; தருமமும் என - அறமும் (போலவும்); எதிர் சென்று தாக்கினார் - ஒருவர் மற்றொருவரை எதிர்த்துத் தாக்கினார்கள். |
கருமம், அவிஞ்சை, பாவம் என்பன இராவணனுக்கும் ஞானம், விஞ்சை, தருமம் என்பன இராமனுக்கும் உவமையாயின. இவை ஒன்றற்கொன்று எதிர்நிலையினவாயின. விஞ்சை - வித்தை அவிஞ்சை - அஞ்ஞானம். |
(24) |
9728. | சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும், |
| உரவு கொற்றத்து உவணத்து அரசனும், |
| பொர உடன்றனர் போலப் பொருந்தினர், |
| இரவும் நண்பகலும் என ஏற்றனர். |
| |
சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும் - தலைகள் ஆயிரம் படைத்த ஆதி சேடனும்; உரவு கொற்றத்து - வலிமையும் வெற்றியும் படைத்த; உவணத்து அரசனும் - கருட வேந்தனும்; பொர உடன்றனர் - போரிட எதிர்த்து நின்றனர்; போலப் பொருந்தினர்- என்பது போலப் பொருந்தி நின்றனர்; இரவும் நண்பகலும் என - நள்ளிரவும் நண்பகலும் போல; ஏற்றனர்- (அவ்விருவரும்) இசைந்து தோன்றினர். |
(25) |
9729. | வென்றி அம் திசை யானை வெகுண்டன |
| ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர்; |