பக்கம் எண் :

304யுத்த காண்டம் 

அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார்.
 

வென்றி அம் திசை யானை- வெற்றி மிக்க அழகிய திக்கு
யானைகள்; வெகுண்டன   -  சினம் கொண்டனவாய்; ஒன்றை 
ஒன்று
  -  ஒன்றோடொன்று; முனிந்தவும்- வெறுத்து   நின்றன; 
ஒத்தனர்
- போன்றிருந்தனர்; அன்றியும்  -  அதுவல்லாமலும்;
நரசிங்கமும்   -   நரசிங்க  மூர்த்தியும்;   ஆடகக்  குன்றம்
அன்னவனும் 
 -  பொன்மலை  போன்ற இரணியனும்; பொரும்
கொள்கையார்
- ஒப்பென்று சொல்லுமாறும் விளங்கினார்கள்.
 

இராமபிரான்   நரசிங்கமாகவும், இராவணன் இரணியனாகவும்
கூறப்பட்டனர். 
 

(26)
 

9730.

துவனி வில்லின்பொருட்டு ஒரு தொல்லைநாள்,
'எவன் அவ் ஈசன்?' என்பார் பொர, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார்.
 

தொல்லை  ஒரு நாள்  - பண்டொரு   காலத்தில்; துவனி
வில்லின்    பொருட்டு 
- முழக்கம் நிறைந்த (இரண்டு) விற்கள்
காரணமாக;  'எவன்   அவ்    ஈசன்?'  என்பார்  -  எவன்
உண்மையில் தலைமை சான்ற கடவுள் என அறிய விரும்பியவரான
இமையவருக்காய்;   பொர  -  போரிட   முற்பட்டு;   ஏற்று  -
அவ்விற்களை  எடுத்து; எதிர்  - ஒருவரை யொருவர்  எதிர்த்து
நின்ற;   புவனம் மூன்றும் பொலங்கழலால் தொடும் - மூன்று
உலகங்களையும் தன்   பொற்   பாதங்களால் தொட்ட; அவனும்-
அந்தத்   திருமாலும்;    அச்சிவனும்  -  அந்தச்  சிவபிரானும்;
எனல் ஆயினார்  -  என்னும்     நிலையினராகக்   (இராமனும்
இராவணனும்) காட்சி தந்தார்கள். 
 

(27)
 

9731,

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான்.
 

கண்ட  -  (இராம    இராவணர்   போர்    நிகழ்ச்சிகளை
வானத்திலிருந்து) பார்த்த; சங்கரன் நான் முகன்- சிவனும்