பிரமனும்; கைத்தலம் - தங்கள் கரங்கள்; விண்டு அசங்க - நிலைதிரிந்து நடுங்கவும்; தொல் அண்டம் வெடித்திட - பழமையான பிரமாண்டப் பகுதி வெடித்துப் போகவும்; அண்டம் - விண்வெளியில்; சங்கத்து அமரர் தம் - திரண்ட தேவர்களின்; ஆர்ப்பெலாம் - பெரு முழக்கங்களையெல்லாம்; உண்ட- (முன்பு தேவரை வெற்றி கொண்ட காலத்தில்) உண்டு முடித்த; சங்கம்- தன் சங்கினை; இராவணன் ஊதினான் - இராவணன் முழக்கம் செய்தான். |
(28) |
| 9732. | சொன்ன சங்கினது ஓசை துளக்குற, |
| 'என்ன சங்கு?' என்று இமையவர் ஏங்குற, |
| அன்ன சங்கைப் பொறாமையினால், அரி - |
| தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். |
| |
அன்ன - அந்த (இராவணனின்); சங்கை - சங்கின் (ஓசையைப்); பொறாமையினால்- (தான்) பொறுத்துக் கொள்ளாமையினால்; சொன்ன - மேற்குறித்த; சங்கினது ஓசை - (இராவணனது) சங்கின் ஒலி; துளக்குற- நிலைகுலையும்படியாகவும்; இமையவர் - தேவர்கள்;'என்ன சங்கு?' என்று - இது யாருடைய சங்கு?' என்று; ஏங்குற- (ஐயுற்று) ஏக்கமுறவும்; அரிதன்ன- திருமாலினுடைய; வெண் சங்கு தானும்- பாஞ்ச சன்னியம் என்னும் வெண்ணிற வலம் புரிச்சங்கும்; முழங்கிற்று- (தானே) முழக்கம் செய்தது. (ஆல் - அசை). |
திருமாலின் சங்கம் தானே முழங்கும் இயல்பினது என அறியலாகிறது. |
(29) |
| 9733. | ஐயன் ஐம் படைதாமும் அடித் தொழில் |
| செய்ய வந்து அயல் நின்றன; தேவரில் |
| மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள் |
| பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். |
| |
ஐயன்- திருமாலின்; ஐம்படை தாமும் - சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில் செய்ய - (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு; அயல் நின்றன - பக்கத்தில் காத்து நின்றன; (ஆனால்), வேதங்கள் - மறைகள்; பொய்யில் தன்னை - பொய்யற்ற மெய்யான தன்னை; புலன் தெரியாமை போல்- (மானிட வடிவெடுத்த அவனை) அறிந்து |