கொள்ளாதவாறு போல; அன்னவை- அவ்வைம்படைகளை; தேவரில் மெய்யன்- தேவர்களுள் மெய்ப்பொருளாயுள்ள திருமால்; கண்டிலன்- காணவில்லை. |
தானெடுத்த வேடத்தை வேதங்கள் எப்படி அறியவில்லையோ அது போன்ற மனித அவதாரமெடுத்த தான் ஐம்படைகளையும் அறியவில்லை. |
ஐம்படைகளாவன: சுதரிசனம் (சக்கரம்), பாஞ்சன்னிபம் (சங்கு), கௌமோதகி (கதை), நாந்தகம் (வாள்), சார்ங்கம் (வில்) |
புலன் தெரிதல் - உண்மை அறிதல். |
(30) |
| |
| 9734. | ஆசையும் விசும்பும் அலை ஆழியும் |
| தேசமும் மலையும் நெடுந் தேவரும் |
| கூச, அண்டம் குலுங்க, குலம் கொள் தார் |
| வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். |
| |
(அப்போது), ஆசையும்- திசைகளும்; விசும்பும் - வானமும்; அலை ஆழியும்- அலைகள் சூழ் கடலும்; தேசமும் - பூமிப் பரப்பும்; மலையும் - மலைகளும்; நெடுந் தேவரும்- பெருமையால் உயர்ந்த தேவர்களும்; கூச - நடுங்கவும்; அண்டம் குலுங்க- அண்டம் அசைந்தாடவும்; குலம் கொள்தார்- பலவகை மலர்க்குலமும் அமைந்த மாலையை அணிந்த; வாசவன் - இந்திரனுடைய; சங்கை- சங்கினை; மாதலி வாய் வைத்தான்- (தேர்ப்பாகனாகிய) மாதலி தன் வாயில் வைத்து ஊதினான். |
(31) |
இராம இராவணப்போர் தொடக்கம் |
| 9735. | துமில வாளி அரக்கன் துரப்பன |
| விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே, |
| கமல வான் முக நாடியர் கண் கணை |
| அமலன் மேனியில் தைத்த அனந்தமால். |
| |
அரக்கன் துரப்பன- இராவணன் செலுத்துகின்றனவாகிய; துமில வாளி - ஆரவாரத்தோடு வரும் அம்புகள்; விமலன் - மாசு மறுவற்ற இராமபிரான்; மேனியின் வீழ்வதன் முன்னமே- திருமேனியில் வந்து பாய்வதற்கு முன்பாகவே; கமல முக- தாமரை போன்ற முகமுடைய; வான் நாடியர்- வானத்துத் தேவ கன்னிகையர்; கண்கணை- கண்களாகிய அம்புகள்; அமலன் |