பக்கம் எண் :

308யுத்த காண்டம் 

வீழி- வீழிப்பழம் போன்ற; வெங்கண் இராவணன்- கொடிய
கண்களையுடைய இராவணன்; வில்ஒலி- வில்லின் ஓசை; ஏழு
வேலையும்
- ஏழு கடல்களும்; ஆர்ப்பு எடுத்து என்னலாம்-
பேரொலி எழுப்பின என்று கூறுதற்குரியதாய் இருந்தது; ஆழி
நாதன்
- சக்கராயுதம் படைத்த இராமபிரானுடைய; சிலை ஒலி-
வில்லின்   ஒலியோ;   அண்டம்    விண்டு-   விண்வெளி
பிளக்கும்படி; ஊழி பேர்வுழி - ஊழிக்காலம்   வரும் போது
(உண்டாகும்);   மாமழை ஒத்தது- பெரு  முகில்களில் எழும்
இடியோசையை நிகர்த்திருந்தது.
 

ஆழி நாதன் - திருப்பாற்கடலின் தலைவன் என்றுமாம். மழை
இடியைக் குறித்ததால் ஆகுபெயர்.
 

வீழி - விழுதி என்னும் செடி.
 

(35)
 

9739.

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்

வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர் - 

ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர், 

வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 

 

ஆங்கு நின்ற- (இவ்வொலிகளைச்  செவியுற்று) அவ்விடத்திலே 
நின்ற; அநுமனை  ஆதியாம் - அநுமன் முதலாவதாக அமைந்த; 
வீங்கு வெஞ்சின வீரர- பொங்கும் கொடுங்கோபமுள்ள சிறந்த 
வீரர்களும்; வீழ்ந்தனர்- தரையில் விழுந்தனர்; ஏங்கி நின்றது 
அலால்
- என்ன செய்வோம் என்று ஏக்குற்று நின்றதன்றி; ஒன்று 
இழைத்திலர்
- வேறு எதுவும் செய்யலாற்றாதவராயினர்; வாங்கு 
சிந்தையர்
- ஓய்ந்த உள்ளத்தினராய்; செய்கை மறந்துளார்
செயலற்றுப் போயினர்.
 

வாங்குதல் - தாழ்தல் (ஓய்தல்)
 

(36)
 

9740.

'ஆவது என்னை கொலாம்?' என்று அறிகிலார், 

'ஏவர் வெல்வர்?' என்று எண்ணலர் ஏங்குவார், 

போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால், 

தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 

 

தேவரும்- தேவர்களும்; 'ஆவது என்னை கொலாம்- 'என்ன 
நிகழுமோ'; என்று அறிகிலார்- என்று அறியாதவர்களாய்; 'ஏவர் 
வெல்வர்?'
- 'எவர் தாம் போரில் வெல்வர்?'; என்று எண்ணலர்-