என்று சிந்திக்க முடியாதவர்களாய்; ஏங்குவார்- ஏக்கமுறுவார்; போவர்- (இலக்கறியாது) செல்வர்; மீள்வர்- திரும்பி வருவர்; பதைப்பர்- உள்ளம் அஞ்சுவர்; பொருமலால் - மனம் விம்மி; தங்கள் செய்கை மறந்தனர் - தாம் யாதும் செய்யும் திறனற்றுப் போயினர். |
(37) |
| 9741. | சேண அந்தரம் நோக்கலும் திண் சரம், |
| பூண முந்தின, சிந்தின பூ மழை, |
| காண வந்த கடவுளர் கை எலாம் - |
| ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? |
| |
திண்சரம் - (இராமபிரானுடைய) வலிமைமிக்க அம்புகள்; சேண அந்தரம் நோக்கலும்- தொலைவிலுள்ள வானத்தைக் குறிபார்க்கத் தொடங்கியதும்; காண வந்த கடவுளர் கையெலாம்- காண்பதற்கு வந்த தேவர்கள் கரங்கள் எல்லாம்; சிந்தின பூ மழை- தூவிய மலர்மாரி; பூண முந்தின - (வானை) அழகு செய்யும்படி முன்தோன்றின; ஆணவம் துணை- செருக்குக்குத் துணையாக;யார் உளர் ஆவரோ?- யார் தான் இருக்க முடியும்? |
ஆணவம் இல்லாத இராமனைத் தேவர் கொண்டாடினர் என்பதாம். |
(38) |
| 9742. | நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் |
| பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன - |
| ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன்தன் |
| தீண்ட வல்லர் இலாத சிலையுமே. |
| |
ஆண்ட வில்லி தன் வில்லும்- அனைத்துலகையும் (அறநெறியில்) ஆளும் வில்லாற்றல் மிக்க இராமபிரான் வில்லும்; தீண்ட வல்லர் இலாத - பிறரால் தொட்டெடுக்க முடியாத; அரக்கன் தன் சிலையுமே- இராவணனின் வில்லும்; நீல வான்- நீல வானத்தில்; நெடுவில் - நெடிய இந்திர விற்கள்; இரண்டு- இரண்டு; நீண்ட மின்னொடு பூண்டு- நீண்ட மின்னலாகிய (கயிறு) பூண்டு; எதிர் நின்றன போன்றன - எதிரெதிர் நின்றாற் போல் விளங்கின. |
இரண்டு வான விற்கள் மின்னலாகிய கயிற்றுடன் விளங்குவது போல் இருவர் வில்லும் தோன்றின. |
(39) |