| 9745. | மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் |
| நால் கலங்க நகும்தொறும், நாவொடு |
| கால் கலங்குவர், தேவர்; கண மழைச் |
| சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். |
| |
மால் கலங்கலில் சிந்தையன்- திருமாலைக் கண்டு கலக்கமற்ற மனம் படைத்தவனான இராவணன்; நால் மாதிரம் கலங்க- நான்கு திசைகளும் நிலைகுலையும்படி; நகும் தொறும் - பெருஞ்சிரிப்புச் செய்யும் போது; தேவர்- தேவர்கள்; நாவொடு கால் கலங்குவர்- நாக்கும், பாதமும் நடுங்குவர்; சூல்- கருக்கொண்ட; கணமழை கலங்கும்- முகில் கூட்டங்கள் கலங்கும்; இலங்கை- இலங்கை மா நகரமும்; துளங்கும் - நடுக்கம் கொள்ளும். |
(42) |
| 9746. | இக் கணத்தும் எறிப்ப தடித்து என, |
| நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என, |
| பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை |
| புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. |
| |
பக்கம்- (இராவணனது இரு) பக்கங்களிலும்; வீசும் படைச்சுடர் - ஒளி வீசுவனவாகிய ஆயுதங்களின் ஒளி; பல் திசை புக்குப் போக- பல்வேறு திசைகளிலும் புகுந்து செல்பவை; பொடிப்பன- (அனைத்தையும்) சாம்பலாக்கின; போக்கு இல- தாம் அழியாதிருந்தன; (அவைதாம்) இக்கணத்தும்- இந்த நேரத்திலே கூட; நெக்க மேகத்து- சிதைந்த மேகத்தினிடத்து; உதிக்கும் - தோன்றும்; நெருப்பு என - மின்னலாகவும்; தடித்து என - இடியாகவும்; எறிப்ப- ஒளி வீசுகின்றன. |
(43) |
இராவணன் சின மொழி |
| 9747. | 'கொற்ற அம்பிற் கொடு கொல்லுதல் கோள் இலாச் |
| சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும் |
| பற்றி வானில் சுழற்றி, படியின்மேல் |
| எற்றுவேன்' என்று உரைக்கும், இரைக்குமால். |
| |
'கொற்ற அம்பிற் கொடு- வெற்றி தரும் அம்பு கொண்டு; கொல்லுதல் - கொல்லுதலாகிய; கோள் இலா- நோக்கு இன்றி; |