சிற்றையாளனை- இச்சிறுவனை; தேவர் தம் தேரொடும் - இந்திரன் தேரினோடும்; பற்றி - கையால் எடுத்து; வானில் சுழற்றி- வானில் தூக்கிச் சுழற்றி; எற்று வேன்- நிலத்தின் மேல் மோதுவேன்'; என்று உரைக்கும்- என்று (சினத்தால் இராவணன்) கூறுவான்; இரைக்கும்- கூக்குரலிடுவான். |
(ஆல் - அசை) |
(44) |
| 9748. | 'தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற, |
| வடித்து வைத்தது மானிடற்கே? வலி |
| ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும் |
| பிடித்துக் கொள்வென், சிறை' எனப் பேசுமால். |
| |
'தடித்து - மின்னலை; வைத்தன்ன - (திரட்டி) வைத்தாற போன்ற;வெங்கணை - கொடிய அம்பு; தாக்கு அற - தாக்கும் வலிமை அற்றுப் போகும்படி; மானிடற்கே - இம்மனிதனுக்கு; வலி வடித்து வைத்தது? - (ஆற்றல்) வடித்து வைக்கப் பட்டுள்ளதோ? (இல்லை) ஒடித்து - வலிமையை அழித்து; தேரை உதிர்த்து - தெய்வத்தேரைப் பொடியாக்கி; ஒரு வில்லொடும் - ஒப்பற்ற அவன் வில்லோடும்; சிறைபிடித்துக் கொள்வென் - நான் அவனைச் சிறைபிடிப்பேன்'; எனப் பேசும் - என்று இராவணன் சினமொழி கூறுவான். |
ஆல் - அசை. |
(45) |
இராவணன் அம்பு எய்தலும் தடுத்தலும் |
சந்தக் கலிவிருத்தம் |
| 9749. | பதைக்கின்றது ஒர் மனமும், இடை படர்கின்றது ஒர் |
| சினமும், |
| விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை |
| வெய்யோன், |
| குதைக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழையக் |
| கொடுங் கடுங் கால் |
| உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும்ஏறு என, |
| எய்தான். |