பதைக்கின்றது ஓர் மனமும் - நடுக்கமுறுகின்ற ஓர் உள்ளப் பாங்கும்; இடை படர்கின்றது ஓர் சினமும் - இடையிலே பொங்கிப் படர்கின்ற கோபமும்; விதைக்கின்றன - எல்லாப் பக்கங்களிலும் தூவப்படுவதாகிய; பொறி பொங்கின விழியும் - நெருப்புத் துளிகள் எழும் கண்களும்; உடை - பொருந்திய; வெய்யோன்- கொடியவனாகிய இராவணன்; குதைக்கின்றன- குதை (என்னும் வில்) உறுப்பினின்றும் வெளி வரும் அம்புகள்; நிமிர் வெஞ்சிலை குழைய- சொரிய நிமிரும் கொடிய வில் வளைத்து; கொடும் கடும் கால்- துன்புறுத்தும் புயல் காற்றை; உதைக்கின்றன - உற்பத்தி செய்து விடும்; சுடர் வெங்கணை- ஒளிமிக்க தீய அம்புகளை; உரும் ஏறு என- இடியேறுகள் போல; எய்தான் - (சிலையினின்றும்) செலுத்தினான். |
குதை - கழுந்து, திரண்ட நுனி (வில் உறுப்பு). |
(46) |
| 9750. | உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின் |
| மருமத்தினும் நுழைகிற்பன, மழை ஒப்பன, வானோர் |
| நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப் |
| பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் |
| பெரிய. |
| |
(இராவணன் ஏவிய அம்புகள்), உரும் ஒப்பன- பேரிடி போன்றன; கனல் ஒப்பன - நெருப்பை நிகர்த்தன; ஊற்றம் தரு கூற்றின் - வலிமை மிக்க இயமனுடைய; மருமத்தினும் நுழைகிற்பன- மார்பிலும் ஊடுருவ வல்லன; மழை ஒப்பன - மழை போலப் பெருக வல்லன; வானோர் நிருமித்தன - தேவர்களால் உருவாக்கப் பெற்றன; படை- எதிரிகள் ஆயுதங்கள்; பற்று அற - செறிவு அற்றுப் போக; நிமிர்வுற்றன- மேலேற வல்லன; அமிழ்தப் பெரு மத்தினை- அமுதம் (கடைவதற்காகத் திருப்பாற்கடலில் இட்ட) பெருமத்தாகிய மந்தர மலையினை; முறை சுற்றிய- முறையே (கடைகயிறாகச்) சுற்றிய; பெரும்பாம்பினும்- பெரிய பம்பாகிய வாசுகியைக் காட்டிலும்; பெரிய- உருவத்தில் பெரியன. |
ஓசையால் இடியையும், அழிவால் நெருப்பையும் பெருக்கத்தால் மழையையும், உருவத்தால் வாசுகியையும் நிகர்த்தனவாகிய அம்புகள் தெய்வத்தன்மை உடையனவாகவும், சாவையும் கொல்லும் திறனுடையனவாகவும் கூறப்பட்டன. |
(47) |