| 9751. | 'துண்டப்பட நெடுமேருவைத் தொளைத்து, உள் |
| உறை தங்காது |
| அண்டத்தையும் பொதுத்து ஏகும்' என்று |
| இமையோர்களும் அயிர்த்தார்; |
| கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் |
| கடல், கனகச் |
| சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே |
| அறத் தடுத்தான். |
| |
(இராவணன் எய்த அம்புகள்) நெடு மேருவை- உயர்ந்த மேரு மலையை; துண்டப்பட- பிளவுபடுத்தி; தொளைத்து- ஊடுருவி; உள் உறை தங்காது - உள்ளை உறைந்து நில்லாது; அண்டத்தையும் - விண்வெளியையும்; பொதுத்து- துளைத்து; ஏகும் என்று - செல்லும் என்று; இமையோர்களும் - தேவர்களும்; அயிர்த்தார்- ஐயமுற்றார்கள்; கணைக் காற்றினை - (எழும்) அம்புப் புயலை; கருணைக் கடல்- அருட் கடலாகிய இராமன்; கனகச் சண்டச் சரமழை கொண்டு- பொன்மயமானதும் கொடியதுமான (தன் அம்பு) மாரியினால்; அவை இடையே அற- அவ்வரக்கன் அம்புகள் நடுவழியில் அழிய; தடுத்தான் - தடுத்துவிட்டான். |
(48) |
| 9752. | உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற, |
| இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, |
| விறலும்; |
| தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்தன |
| துரந்தான் - |
| கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, |
| கடியான். |
| |
உடையான் - ஒரு தலைவன்; முயன்று உறுகாரியம் - முயற்சியினால் செய்யும் செயலை; உறுதீவினை - அவனுக்குற்ற தீய வினைகள்; உடற்ற- அழிக்க; இடையூறு உற- தடைகள் ஏற்பட்டு; சிதைந்தாங்கு என- (அச்செயல்) அழிந்தாற் போல; சரம்- இராவணன் அம்புகள்;விறலும் சிந்தின- ஆற்றல் இழந்தன (ஆனால்); கடியான் -கொடியவனான இராவணன்; தொடைஊறிய- தொடுத்தலில் சிறந்தனவும்; தொகை தீர்ந்தன - அளவில் மிகுதியாயினவுமான; கணைமாரிகள்- அம்பு மழையை; கடை |