பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்315

ஊறு உறு - யுக முடிவின் பொழுது மிக்கு வருகின்ற; கணமா மழை-
அடர்ந்த கருமுகில்கள்;  கால்வீழ்த்தென- கீழிறங்கின என்னுமாறு; 
துரந்தான்
- பொழிந்தான்.
 

ஒருவன் எடுத்த செயல் அவன் பாவத்தால் வீழ்ந்தாற்போல
என்னும் உவமை நீதி சான்றதாய்த் திகழ்கிறது.
 

(49)
 

9753.

விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை 

போர்த்தன; இமையோர்

கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; 

கலையோர்

எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; 

'என்னே,

திண் போர்த் தொழில்!' என்று, ஆனையின் உரி 

போர்த்தவன் திகைத்தான்.

 

(இராவணன் எய்த அம்புகள்)  விண் போர்த்தன-  வானை மூடின;
திசை போர்த்தன - திசைகளை   மறைத்தன;   மலை  போர்த்தன-
மலைகளை   மூடின;   இமையோர்  கண்  போர்த்தன - தேவர்கள்
விழிகளையும் மறைத்தன; கடல் போர்த்தன -  நெடுங்கடல்களையும் 
தெரியாது தடுத்தன;   படி  போர்த்தன-   நிலத்தையும்  மறைத்தன; 
கலையோர் எண் போர்த்தன
-  கலை ஞானம் மிக்கவர்  எண்ணும் 
கணக்கையும் பொய்ப்பித்தன; எரி போர்த்தன - நெருப்பைப் போர்த்து 
வந்தன; இருள் போர்த்தன- இருளை அணைத்து வந்தன; (இதனைக் 
கண்டு), ஆனையின் உரி போர்த்தவன் - யானைத் தோலை அணிந்த
சிவபெருமான்; 'என்னே திண் போர்த் தொழில்!'- எத்துணை பெரிய 
போர்க்கலை இது'; என்று திகைத்தான்- என்று மனம் மயங்கினான்.
 

(50)
 

9754.

அல்லா நெடும் பெருந் தேவரும் மறைவாணரும் 

அஞ்சி,

எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், 

இருந்தார்;

செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது 

சேனை;

வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் 

தொழில் வேட்டான்.