(முன் குறித்த சிவபெருமான்) அல்லா- அல்லாத; நெடும்பெருந் தேவரும்- உயர்ந்த பெரிய தெய்வங்களும்; மறைவாணரும்- முனிவர்களும்; எல்லார்களும் - மற்றுள யாவரும்; கரம் கொண்டு- தம் கரத்தால்; இருவிழி பொத்தினர் - இரு கண்களையும் மூடிக்கொண்டனர்; இருந்தார்- செயலற்றிருந்தனர்; செல் ஆயிரம் விழுங்கால் - ஓராயிரம் இடி ஒன்றாக விழுந்தால்; உகும்- சிதறிப் போகும்; விலங்கு- மலைக்கு; சேனை ஒத்தது- (வானர) சேனை நிகராயிற்று; அது கண்டு - இந்நிகழ்ச்சியைக் கண்டு; வில்லாளனும் - விற்கலை வல்ல இராமனும்;அவை - இராவணன் அம்புகளை; விலக்கும் தொழில் - தடுக்கும் செயலை; வேட்டான்- விரும்பி மேற்கொண்டான். |
(51) |
| 9755. | செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், |
| சிறுவிலை நாள், |
| முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, |
| முதல்வன் |
| வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் |
| வகுத்து அமைத்த |
| வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி |
| விசிகம். |
| |
முதல்வன்- அனைத்துக்கும் முதலாகிய இராமபிரான்; வந்து ஈந்தன- போர்க்களம் புகுந்து எய்தனவாகிய; வடிவெங்கணை- கூரிதாய் வடித்த கொடிய அம்புகள்; செந்தீவினை- அழல் ஓம்பும் அறவினை செய்யும்; மறைவாணனுக்கு- வேதியனுக்கு; சிறு விலை நாள்- பஞ்ச காலத்தில்; முந்து ஈந்தது - முந்திக் கொடுத்த; ஓர் உணவின் பயன்- உயர்ந்த அன்னதானப் பயன்; எனல் ஆயின- என்று சொல்லுமாறு வளர்ந்தன; (ஆனால்) அரக்கன் சொரி விசிகம் - இராவணன் எய்த அம்புகள்; அனையான் - அன்னவன்; வகுத்து அமைத்த - தேடித் தொகுத்துக் கொண்ட; வெந்தீ வினைப் பயன் - பாவங்களின் பயனை; ஒத்தன- ஒப்பனவாய் அழிந்தன. |
தக்கவர்க்கு அளித்த தானத்தின் பயன் பெருகும் என்ற தத்துவம் கூறுகின்றார். சிறு விலை நாள் - பஞ்ச காலம். |
'அல்லவை தேய அறம் பெருகும்' - திருக்குறள் 96. |
(52) |