இராம இராவணப் பெரும்போர் | | 9756. | நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் | | விடுவான், | | ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் | | அறுப்பான்; | | கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி, | | சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். | | | ஆறா விறல் மறவோன் - வற்றாத வீரத்தைப் பெற்றிருக்கும் வீரனாகிய இராவணன்; நொடி ஒன்றினின்- ஒரு நொடிப் பொழுதில்; நூறாயிரம் வடிவெங்கணை- நூறாயிரம் கூரிய கொடிய அம்புகளை; விடுவான்- ஏவுவான்; அவை- அவ்வம்புகளை; தனி நாயகன்- ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; அறுப்பான்- துண்டு படுத்துவான்; கூறு ஆயின- (அவ்வாறு) துண்டு படுத்தப்பட்டவை; கனல் சிந்துவ- நெருப்புப் பொழிவனவாய்; குறுகிப் புனல் குடிக்க- நெருங்கி நீரை அருந்தியமையால்; கடலும்- சமுத்திரங்களும்; சேறு ஆயின- வற்றிச் சேறாயின; பொடி ஆயின - புழுதி ஆயின;திடர் ஆயின- மண்மேடாகிப் போயின. | (53) | | 9757. | வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் | | வெம் போர் | | வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, | | இருப்பு உலக்கை, | | தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம் இவை | | தொடக்கத்து | | எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு | | அறிந்தான். | | | வில்லால்- தன் கை வில்லால்; சரம் துரக்கின்றவற்கு- அம்புகள் எய்கின்ற இராமனுக்கு (எதிராக); செரு அறிந்தான் - போர்க்கலை அறிந்தவனும்; மிடல் வெம்போர் வல்லான்- வலிமையும் கொடுமையும் மிக்க யுத்தத்தில் வல்லவனுமாகிய இராவணன்; உடனே - மறுகணத்திலேயே; எழு, மழு, தோமரம், மணித்தண்டு, இரும்பு உலக்கை- எழு முதல் உலக்கை ஈறான ஆயுதங்களையும்; தொல் ஆர் மிடல்- பழமை மிக்க வலிமையுள்ள; வளை, சக்கரம், சூலம் - வளை முதலாகிய படைகளையும்; இவை |
|
|
|