பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்319

கொண்டு; படு   களிறு ஆம் - துன்பப்படும்   யானையாம்; எனக்
கொதித்தான்
- என்று   சொல்லும்படி   மனக்கொதிப்பு    உற்ற
இராவணன்;உடனே- அப்பொழுதே; பத்துச் சிலை எடுத்தான்-
பத்துக் கரங்களால்   பத்து   விற்களை   எடுத்தவனாய்;   கணை
தொடுத்தான்
- அம்புகளைத் தொடுத்து; பல முகிலா- எண்ணற்ற
மேகங்கள்;   தொத்துப்படு   நெடுந்   தாரைகள்-  தொகுதி
தொகுதியாய்ப் பொழியும்   நீண்ட தாரைகள்;   சொரிந்தாலெனத் 
துரந்தான்
- சொரிவது போல் (அம்புகளை) எய்தான்.
 

தொத்து - தொகுதி, கூட்டம்.
  

(56)
 

9760. 

ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்

நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க, 

தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் 

செருக்கி,

கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின

கொடிய.

 

ஈசன்   விடு   சரமாரியும்- எல்லாச்   செல்வங்களுக்கும்
தலைவனாகிய   இராமன் எய்யும் அம்பு   மழையும்; எரிசிந்துறு-
நெருப்பைச்   சொரிகிற;   தறுகண் - கொடுமை மிக்க; நீசன்
விடு சரமாரியும்
- இழிந்த   இராவணன் எய்யும் அம்பு மழையும்;
இடை எங்கணும் நெருங்க - எல்லா இடங்களிலும் நெருக்கமாய்
விழ; தேசம் முதல் ஐம் பூதமும்- நிலம் முதலாக அமைந்த
ஐந்து பூதங்களும்; செருக் கண்டனர் செருக்கி- போர் கண்டு
உற்சாகம் மேற்கொண்டு; கூசிம் மயிர்ப் பொடிப்பு அற்றன-
புல்லரிப்பு உற்ற நிலை (மெல்ல)   வாங்கின;   கொடிய அனல்
ஆயின
- (ஏனெனில் அம்புகளின் நெருப்பால்) அவையும் கொடிய
வெப்பம் பூண்டன.
 

முதலில் களித்த ஐம்பூதங்கள் போரில் வெப்பத்தால்
பின்னர் தத்தளித்தன.
 

தேசம் - தேஜஸ் என்று கொண்டு நெருப்பென்பதும் உண்டு.
 

(57)
 

கலி விருத்தம் (வேறு)
 

9761.

மந்தரக் கிரி என, மருந்து மாருதி 

தந்த அப் பொருப்பு என, புரங்கள்தாம் என,