| கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென |
| அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர்அரோ. |
| |
(அப்பொழுது) அவ் அரக்கன் தேர்- அந்த அரக்கனான இராவணனின் தேரானது; மந்தரக்கிரி என - மந்தர மலை என்னுமாறும்; மாருதி தந்த அ மருந்துப் பொருப்பு என - அனுமன் எடுத்து வந்த அந்தச் சஞ்சீவி மலை என்னுமாறும்; புரங்கள் தாம் என - முப்புரங்கள் தாமோ என்னுமாறும்; கந்தருப்பந் நகர் - கந்தர்வ நகரம்; விசும்பில் கண்டென - விண்ணில் காட்சி தருகிறது என்னுமாறும்; அந்தரத்து எழுந்தது - வானில் மேலெழுந்தது. |
(அரோ - அசை) |
(58) |
| 9762. | எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன் |
| பொழிந்தன சர மழை உருவிப் போதலால், |
| ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக் |
| கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. |
| |
இலங்கை காவலன்- இலங்கையர் கோனான இராவணன்; உயர் தேர்மிசை எழுந்து- உயர்ந்த தேரின் மீது வான்வழி எழுந்து; பொழிந்தன சர மழை - கொட்டிய அம்பு மழையானது; உருவிப் போதலால் - (உடலில்) பட்டு உருவிச் செல்லுதலால்; ஒழிந்ததும் ஒழிகிலது என்ன- அழியாததும் அழிந்தது என்னும்படியாக; இராமன் காணவே - இராமன் கண்டு கொண்டிருக்கும் போதே; கவிக்குலம் - வானரக் குலம்; ஒல்லெனக் கழிந்தது - விரைவாக இறந்தொழிந்தது. |
(59) |
| 9763. | 'முழவு இடு தோளொடு முடியும் பல் தலை |
| விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ? |
| மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்; |
| எழ விடு, தேரை' என்று இராமன் கூறினான். |
| |
(இதனைக் கண்ட) இராமன் - இராமபிரான் (மாதலியிடம்); 'மழவிடை அனைய- இளங்காளைகள் போன்ற;நம்படைஞர் மாண்டனர் - நம் படைவீரர் இறந்தனர்; முழவு இடு தோளொடு- மத்தளம் ஒத்த (இராவணன்) தோள்களோடு; முடியும்- மகுடமும்; பல்தலை - பலவாகிய தலைகளும்; விழ- தரையில் விழுமாறு; இனி விடுவேன்- இனி என் அம்புகளை ஏவுவேன்; தேரை |