பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்321

எழவிடு- தேரினை வானில் எழுமாறு செய்;விசும்பு சேமமோ? -
(அவனுக்கு) வானம் பாதுகாப்பாகுமோ? (இல்லை); என்று
கூறினான்
- என மொழிந்தான்.
 

(60)
 

9764.

'அந்து செய்குவென்' என அறிந்த மாதலி 

உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை; 

இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம் 

வந்தென, வந்தது, அம் மானத் தேர்அரோ. 

 

அறிந்த   மாதலி - இராமபிரான்   பெருமையை அறிந்துள்ள
மாதலி; 'அந்து செய்குவென் - 'யான்   அவ்வாறே   செய்வேன்';
என- என்று; தேர் எனும்   ஊழிக்காற்றினை- தேர்   என்னும்
பிரளய காலக் காற்றை;    உந்தினன் - (மேலே)    இயக்கினான்;
அம்   மானத்   தேர்- அந்தப்   பெரிய     தேரும்;    இந்து
மண்டிலத்தின்    மேல்
- சந்திர   மண்டலத்தின்   மீது; இரவி
மண்டிலம் வந்தென
- சூரிய   மண்டலம்   வருவது   போல்; 
வந்தது- (இராவணன் தேர் இருக்கும் இடத்துக்கு) வந்து சேர்ந்தது.
 

(அரோ - அசை) அந்து - அப்படி (தெலுங்குச் சொல்)
  

(61)
 

9765.

இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்; 

உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின; 

நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை 

திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 

 

தேரும் தேரும்- இராம இராவணாதியர் தேர்கள் இரண்டும்;
சாரிகை நேர்முறை திரிந்தன- (வானில்) நேரான முறைகளில்
சாரி   திரிந்தன;   (அதனால்)   மழைக்குலம்- மேகக்
கூட்டங்கள்; திக்கு எலாம் - திசைகளில்  எல்லாம்;   இழுகி -
தளர்ந்து;   இரிந்தன- கலைந்தன;  உடுக்குலம் - விண்மீன்
கூட்டங்கள்;   உரிந்தன - இடம்    பெயர்ந்து;   உதிர்ந்து
சிந்தின
- பொடிப்பொடியாய்ச் சிதைந்தன; நெடுவரைக் குடுமி
- உயர்மலைச் சிகரங்கள்; நெரிந்தன - நொறுங்கிப் போயின.
 

(62)
 

9766.

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு 

நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,