பக்கம் எண் :

322யுத்த காண்டம் 

அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும், 

சலம் வரும், குயவன திகிரித் தன்மைபோல். 

 

(அத்தேர்கள்  இரண்டும்)   வலம்   வரும் - ஒன்றையொன்று
வலமாகச் சுற்றும்; இடம் வரும்- இடமாகச் சுற்றி   வரும்; மறுகி
பல முறையும் திரிந்து;   வானொடு நிலம் வரும் - வானத்தையும்
நிலத்தையும் தொட்டு வரும்;  இடம் வலம்  நிமிரும்- (மற்றொரு 
 சமயம்)   இடப்புறம்   வலப்புறமாய் ஓங்கி வரும்; வேலையும் 
கடல்களும்;   குலவரை அனைத்தும் -   மலைக்  குலங்களும்; 
அண்டமும்
- இந்த அண்டவெளியும்;  குயவன திகிரி  தன்மை 
போல்
- சுழலும்   இயல்பினதாகிய   குயவனது  சக்கரத் தன்மை 
போல;   அலம்   வரும் -  சுழன்று  நொந்து;   சலம் வரும்
நடுக்கமுறும்.
 

(63)
 

9767.

'எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது'

என்று

உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன, 

தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர், 

பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். 

 

உழுந்து   உருள்  பொழுதின் - உழுந்து  உருளும் அச்சிறு 
பொழுதுக்குள்;   எவ்   உலகும் சேர்வன -  (அவ்விரு தேரும்)
எல்லா   உலகையும்  சுற்றி  வரும் தன்மையன; (ஆதலால்),  இது
எழும்புகழ்  இராமன் தேர்; அரக்கன் தேர்
- இதுதான்    புகழ் 
மிக்க இராமனின்   தேர்இதுதான்   அரக்கனின்   தேர்; என்று 
என்று; தழும்பிய தேவரும்- பழக்கமுள்ள தேவர்களும்;தெரிவு 
தந்திலர்
- கண்டறிந்து   சொல்ல   இயலாதவராயினர்; பிழம்பின 
- ஒளிவடிவங்கள்; திரிவன-  சுழல்கின்றன; என்னும் பெற்றியார்
- என்று கூறும் தன்மையினராகவே இருந்தனர்.
 

தழும்புதல் - பழகியிருத்தல்
 

(64)
 

9768.

உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின், 

நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின், 

வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி 

சுக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன.