உருள்கள் தாக்கலின் - சக்கரங்கள் தாக்குதலால்; உக்கிலா உடுக்களும்- உதிராத விண்மீன்களும்; நெருப்புச் சிந்தலின்- (ஒன்றோடொன்று உராய்ந்து தேர்கள்) நெருப்புச் சிதறுதலால்; நெக்கிலாமலைகளும்- உருகாத மலைகளும்; வக்கு இலாத் திசைகளும்- பிளந்து போகாத திசைகளும்; உதிரம் வாய்வழி- இரத்தம் வாயின் வழியே; கக்கிலா உயிர்களும்- கக்காத உயிரினங்களும்; காண்பன இல்லை- காணக் கூடாதன ஆயின. |
வக்கு - பிளக்கை |
(65) |
| 9769. | 'இந்திரன் உலகத்தார்' என்பர்; 'ஏன்றவர், |
| சந்திரன் உலகத்தார்' என்பர்; 'தாமரை |
| அந்தணன் உலகத்தார்' என்பர்; 'அல்லரால், |
| மந்தர மலையினார்' என்பர் - வானவர். |
| |
வானவர்- தேவர்கள் (அத் தேரிலிருந்து போரிடுவாரை); 'இந்திரன் உலகத்தார் என்பர் - இந்திர லோகத்தில் உள்ளார் என்பார்கள்; (மற்றொரு சமயம்), ஏன்றவர்- போரிடுவார்; சந்திரன் உலகத்தார் என்பர் - சந்திரமண்டலத்தில் உள்ளார் என்பார்கள்; (இன்னொரு சமயம்), 'தாமரை அந்தணன் உலகத்தார் என்பர் - தாமரையில் வசிக்கும் பிரமதேவன் உலகில் உள்ளார் என்பார்கள்; அல்லரால் - இல்லையில்லை; மந்தர மலையினார் என்பர் - மந்தர மலையில் உள்ளார் என்பார்கள். |
(66) |
| 9770. | 'பாற்கடல் நடுவணார்' என்பர்; 'பல் வகை |
| மாக் கடலினுக்கும் அவ் வரம்பினார்' என்பர்; |
| 'மேல் கடலார்' என்பர்; 'கிழக்கு உளார்' என்பர்; |
| 'ஆர்க்கடை உரும்' என்பர் - அறியும் வானவர். |
| |
அறியும் வானவர்- தொலைவில் நடப்பனவும் அறியவல்லரான தேவர்கள் (இராமனும் இராவணனும் இப்போது); பாற் கடல் நடுவணார் என்பர் - திருப்பாற்கடலின் நடுவிலுள்ளார் என்பார்கள்; 'பல்வகை மாக்கடலினுக்கும் அவ்வரம்பினார்' என்பர்- மேற்குக் கடலில் இருப்பதாகக் கூறுவர்; 'கிழக்கு உளார்' என்பர் - பலவகையான பெருங்கடலுக்கும் அப்பாற்பட்ட எல்லையில் உள்ளார் என்பர்; மேல்கடலார் என்பர் - இல்லையில்லை கீழைக்கடலில் உள்ளார் என்பர்; 'ஆர்க்கடை |