உரும்' என்பர்- தேர்ச்சக்கரத்தின் ஆரக்கால்களில் இடி குடி இருக்கிறது என்றும் கூறுவர். |
(67) |
| 9771. | 'மீண்டனவோ?' என்பர்; 'விசும்பு விண்டு உகக் |
| கீண்டனவோ?' என்பர்; 'கீழவோ?' என்பர்; |
| 'பூண்டன புரவியோ? புதிய காற்று!' என்பர்;- |
| 'மாண்டன உலகம்' என்று, உரைக்கும் வாயினார். |
| |
'மீண்டனவோ' என்பர்- (அத்தேர்கள் இரண்டும்) மீண்டும் பூமிக்கு வந்தனவோ என்பார்கள்; 'விசும்பு விண்டு உக - வானம் பிளந்து விழுமாறு; கீண்டனவோ என்பர்- (இவை) கிழித்து விட்டனவோ என்பார்கள்; 'கீழவோ' என்பர்- பாதாளம் புக்கனவோ என்பார்கள்; 'பூண்டன புரவியோ- தேரில் பூட்டியவை குதிரைகள் தானா? (அல்லது); புதிய காற்று என்பர்- புதுமை வாய்ந்த காற்றேயாகும் என்பார்கள்; 'உலகம் மாண்டன' என்று- இனி உலகம் அழிந்தது என்று; உரைக்கும் வாயினார்- (இவ்வாறெல்லாம்) பேசுகின்ற வாயினை உடையார்களானார் தேவர்கள். |
(68) |
| 9772. | ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும், |
| ஏழுடை மலையினும், உலகு ஒர் ஏழினும் |
| சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா, |
| ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. |
| |
(அக் குதிரைகள்)ஏழுடைக் கடலினும் - ஏழு கடல்களிலும்; தீவு ஓர் ஏழினும்- ஏழு தீவுகளிலும்; ஏழுடை மலையினும் - ஏழு மலைகளிலும்; உலகு ஓர் ஏழினும் - ஏழு உலகங்களிலும்; சூழுடை அண்டத்தின் சுவர்கள்- சூழ்ந்திருக்கும் அண்டத்தின் சுவர்களை; எல்லையா- எல்லையாகக் கொண்டு; ஊழியில் காற்றெனத் திரிந்த- பிரளய காலத்துப் புயலாய்ச் சுற்றித் திரிந்தன; ஓவில- ஓய்வற்றவை ஆயின. |
(69) |
இராமன் தடுத்தலன்றிப் போர் செய்யாமை |
| 9773. | உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும், |
| இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும், |
| அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய |
| படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. |