உடைக்கடம் ஏழினும்- ஆடையாக பூமியைச் சுற்றிய ஏழு கடல்கள் மீதும்; உலகம் ஏழினும்- ஏழு உலகங்கள் மீதும்; இடைப்படு தீவினும் - அவற்றிடையே உள்ள தீவுகள் மீதும்; மலை ஓர் ஏழினும்- ஏழு மலைகள் மீதிலும்; அடைக்கலப் பொருள் என - பாதுகாப்புப் பொருளாக (இராவணன்) வைத்திருந்தவை என்னும்படி; அரக்கன் வீசிய படைக்கலம்- அரக்கனாகிய அவன் வீசிய ஆயுதங்கள்; மழைபடு துளியின் பான்மைய - மழைத்துளிகளென (விழுந்தன). |
(70) |
| 9774. | ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை |
| இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன |
| அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன் |
| செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். |
| |
இராவணன் எறிந்த எய்தன - இராவணன் வீசியனவும் ஏவியனவுமான ஆயுதங்கள்; இறுத்தில- எங்கும் தங்காதனவாய்; ஓட்டிடை- ஓடும் இடங்களில் எல்லாம்; உலகு அனைத்தையும்- அனைத்து உலகங்களையும்; ஒறுத்து உழலும்- அழித்துத் திரியும்; ஆரியன் - மேலோனாகிய இராமன்; அறுத்ததும் தடுத்ததும் அன்றி - அவ்வாயுதங்களை முறித்ததும் தடைசெய்ததும் அல்லாது; செறுத்து- சினமுற்று; ஒருதொழில்- எச்செயலையும்; இடைச் செய்தது இல்லை - போர் நடுவில் செய்யவே இல்லை (ஆல் - ஆசை). |
இராமன் தன் படைக்கலங்களை இராவணன் மீது எய்யாதிருந்தான். (ஆல் - அசை). |
(71) |
| 9775. | விலங்கலும் வேலையும், மேலும் கீழரும், |
| அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும், |
| கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காலக் காற்று, |
| இலங்கையை எய்தின, இமைப்பின் வந்துஅரோ. |
| |
விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்; மேலும் கீழரும் - மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி- சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் - பாயும் எல்லா உலகங்களையும்; கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து திரிந்த; ஓர் ஊழிக்காலக் காற்று- பிரளய காலப் புயல்; இமைப்பின் வந்து - நொடிப்போதில் வந்து; இலங்கையை எய்தின- இலங்கையை அடைந்தது. (அரோ - அசை) |
(72) |