காற்று குதிரைகளைக் குறித்தது |
| 9776. | உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை |
| மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்; |
| வித்தகர் கடவிய விசயத் தேர்ப் பரி, |
| எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். |
| |
வித்தகர்- திறன் மிக்கவராகிய பாகர்கள்; கடவிய- செலுத்திய; விசயத் தேர்ப்பரி - வெற்றி (பலகண்ட) இராம இராவணர் தேரின் குதிரைகள்; உய்த்து- செலுத்தப்பட்டு; கடலிடை மணலின் மும்மையால் - கடற்கரைகளிலுள்ள மணல் துகள்களின் மும்மடங்காக உள்ள; உலகு அனைத்திலும் - எல்லா உலகங்களிலும்; உழன்ற சாரிகை மொய்த்தது - திரிந்து சாரிகைகள் செய்து சேர்ந்தன (எனினும்); இரண்டு பாலவும் - இரண்டு பக்கத்துக் குதிரைகளும்; எய்த்தில - இளைப்படையவில்லை; வியர்த்தில- வியர்வை சிந்தவுமில்லை. |
(73) |
இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல் |
| 9777. | இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில் |
| உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை, |
| சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச் |
| சிந்தினன், இராவணன், எரியும் சிந்தையான். |
| |
எரியும் சிந்தையான்- வெந்து போன நெஞ்சினனாகிய; இராவணன் - இராவணன்; இந்திரன் தேரின் மேல் உயர்ந்த- (இராமன் ஏறி வந்த) இந்திரனது தேரின் மீது உயரே பறந்த; ஏந்து எழில் - அழகு மிக்கதும்; உந்து அரும் பெருவலி - தள்ளுதற்கரிய பேராற்றலுடையதுமான; உருமின் ஏற்றினை - இடியேறாகிய (கொடியை); சந்திரன் அனையது ஓர் சரத்தினால் - பிறைவடிவமுடைய ஒப்பற்ற அம்பினால்; தரைச் சிந்தினன்- தரையில் விழும்படி செய்தான். |
(74) |
| 9778. | சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல் |
| பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும், |
| காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத் |
| தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. |