பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்327

சாய்ந்த வல் உருமு போய் - கீழே வீழ்ந்த வன்மை வாய்ந்த 
இடியேறு சென்று;  அரவத்    தாழ்   கடல் - ஓசை பெற்றுயர் 
ஆழ்கடலில்;   பாய்ந்த வெங்கனல் என-   விழுந்த   கொடு 
நெருப்பாக; முழங்கிப் பாய்தலும்-  பேரொலியுடன் பாய்ந்ததும்;
காய்ந்த  -  பழுக்கக்  காய்ந்த; பேர் இரும்பின் வன் கட்டி
- பெரிய  வலிய இரும்புக் கட்டியானது;   காலுற - பொருந்த;   
தோய்ந்த நீர் ஆம்  என
- தோய்க்கப்பட்ட தண்ணீர் போல; 
ஆழி சுருங்கிற்று
- கடல் நீர் வற்றிப் போயிற்று.
 

(75)
 

இராவணன் இராமன் தேர் புரவி மாதலிமீது அம்பு எய்தல்
 

9779.

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக் 

குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர் 

வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை 

அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறுஅரோ. 

 

(அப்போது இராவணன்)   எழுத்து   எனச்    சிதைவிலா-
(சான்றோர் கவி) எழுத்துப் போல் அழிவில்லாததாகிய;   இராமன் 
தேர்
- இராமனது  தேரின்;  பரிக்குழுக்களை -   குதிரைகளை; 
கூர்ங்கணை
- கூரிய கணைகளால்;  குப்பை ஆக்கி -  நிரம்பும் 
படி செய்து;   நேர் -  நேராக;   வழுத்த   அரு  மாதலி 
வணங்குதற்கு அரிய  பெருமைமிக்க மாதலியின்; வயிர மார்பிடை
- வைரம் பாய்ந்த (உறுதியான) மார்பின் மீது, ஆறொடு ஆறு-
பன்னிரண்டு; கொடுஞ்சரம்- கொடிய அம்புகளை; அழுத்தினன்-
பாய்ச்சினான். அரோ- அசை.
 

(76)
 

இராமன் வருத்தம்
 

9780.

நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்

சால்புடை மாதலி மார்பில் தைத்தன 

கோலுனும் இலக்குவன் கோல மார்பின் வீழ் 

வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு.* 

 

நீல் நிற நிருதர் கோன் - கருநிறம் கொண்ட  அரக்கர்
வேந்தன்; எய்த- விடுத்ததும்; இலக்குவன் கோல மார்பின்
- இலக்குவனின் அழகிய   மார்பில்;   வீழ்   வேலினும் -
பாய்ந்ததுமான வேலைக் காட்டிலும்;  நீதியின் சால்புடை-
நீதியின் நிறைவுடைய;