பக்கம் எண் :

328யுத்த காண்டம் 

மாதலி   மார்பில்    தைத்தன- மாதலியின்   மார்பில்
பட்டனவாகிய; கோல் இனும் - அம்பு இன்னும்; வீரற்கு-
இராமனுக்கு; வெம்மையே விளைத்த- வருத்தத்தையே
விளைவித்தது.
 

(77)
 

இராமனை மறைத்த இராவணன் அம்புகள்
 

9781.

மண்டில வரி சிலை வானவில்லொடும் 

துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய 

உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால், 

கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 

 

இமைப்பு இல் கண்ணினார் - இமையா நாட்டம் பெற்ற
தேவர்கள்; மண்டில  வரிசிலை- மண்டிலமாக  வளைத்துக்
கட்டப்பட்ட (இராவணன்) வில்லிலிருந்து; வான வில்லொடு-
இந்திர  வில்போல  அமையுமாறும்;   துண்ட வெண்பிறை 
எனத் தோன்ற
- பிளவுபட்ட பிறைக்கீற்றாகத் தோன்றுமாறும்
செய்து; தூவிய- ஏவி விடப்பட்ட;உண்டை வெங்கடுங்கணை 
- தொகுதி தொகுதியான  கொடிய  கடிய அம்புகள்; ஒருங்கு 
மூடலால்
-  முழுமையான   (இராமனை)   மறைத்தமையால்; 
இராமனைக் கண்டிலர்
- இராமனைக் காண இயலாதவரானார்.
 

(78)
 

9782.

'தோற்றனனே இனி' என்னும் தோற்றத்தால் 

ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்; 

வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்

காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 

 

(இராமனைக் காணாத)   ஆற்றல்   சால்   அமரரும்
வலிமை சான்ற தேவர்களும்; 'இனி- இப்பொழுது; தோற்றனனே' 
- தோல்வியுற்று விட்டானே; என்னும் தோற்றத்தால்- என்னும்
பிரமையால்;   அச்சம்   எய்தினார்- பயம்     கொண்டனர்;
வேற்றவர்
- பகைவர்;   ஆர்த்தனர்- (மகிழ்ச்சி)   ஆரவாரம்
செய்தனர்; மேலும்   கீழரும்- மேலுலகிலும்    கீழுலகிலும்;
காற்று இயக்கு அற்றது- காற்றின் இயக்கமும் இல்லாதாயிற்று; 
அண்டம் கலங்கிற்று - அண்டம் முழுமையும் துணுக்குற்றது.
 

(79)
 

9783.

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி 

பொங்கில திமிர்ந்தன; விசும்பில் போக்கு இல,