| வெங் கதிர் தண்கதிர், விலங்கி மீண்டன; |
| மங்குலின் நெடும் புனல் மழை வறந்ததால். |
| |
அங்கியும்- நெருப்பும்; தன்ஒளி அடங்கிற்று - தன் இயல்பான ஒளி குன்றிற்று; ஆர்கலி- கடலும்; பொங்கில- பொங்கி எழவில்லை; திமிர்ந்தன - அசைவற்றுக் கிடந்தன; விசும்பில் - வானில்; வெங்கதிர் தண்கதிர் - ஞாயிறும் திங்களும்; போக்குஇல - இயங்கா தொழிந்தன; விலங்கி மீண்டன- வழி விலகித் திரும்பின; மங்குலின்- மேகங்களின்; நெடும் புனல் மழை - நெடிதாய்ப் பெய்யும் மழை நீர்; வறந்தது- வறண்டு போயிற்று. (ஆல் - அசை) |
(80) |
| 9784. | திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின; |
| அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின; |
| விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் |
| குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. |
| |
குசன்- அங்காரகன்; விசைகொடு - வேகமாய்; விசாகத்தை நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்; (என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச் செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள் இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு மேருவும் - உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது - நடுக்கம் கொண்டது. |
போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின் பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது கெட்ட அறிகுறியாகும். |
(81) |
| 9785. | வானரத் தலைவனும், இளைய மைந்தனும், |
| ஏனை, 'அத் தலைவனைக் காண்கிலேம்' எனக் |
| கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் |
| மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். |
| |
வானரத் தலைவனும்- குரக்கரசனான சுக்கிரீவனும்; இளைய மைந்தனும் - தம்பி இலக்குவனும்; ஏனை- பிறரும்; 'அத் தலைவனைக் காண்கிலேம்' என- அந்தத் தலைவனாம் |