பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்33

9243.

'மங்கையை, குலத்துளாளை, தவத்தியை, முனிந்து, 

வாளால்

சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், ''குலத்துக்கே 

தக்கான்'' என்று,

கங்கை அம் சென்னியானும், கண்ணனும்,  

கமலத்தோனும்,

செங் கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால், 

''சிறியன்'' என்னா.

 

மங்கையை, குலத்துளாளை, தவத்தியை - ஒரு பெண்ணை, 
சிறந்த   குலத்துள்  தோன்றியவளை,  தவ  ஒழுக்கமுடையவளை; 
முனிந்து,  வாளால் சங்கை  ஒன்று  இன்றிக் கொன்றால்
முனிந்து வாட்படையினால் ஐயமின்றிக் கொன்றால்; கங்கை அம்
சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
- கங்கை சூடிய 
தலையை உடைய  சிவனும், திருமாலும், பிரமனும்; 'குலத்துக்கே
தக்கான்' என்று
-  'அரக்கர்  குலத்துக்கே  தகுந்தவன் இவன்'
என்று;  செங்கையும்  கொட்டி உன்னை ''சிறியன்'' என்னா
சிரிப்பர்
-  சிவந்த  கைகளைக்  கொட்டி  உன்னைச் ''சிறியன்'' 
என்று எள்ளிச் சிரிப்பர்.
 

பெண்ணைக் கொல்லுதல் பெரும்பாவம். அதுவும் நற்குலத்தில்
தோன்றியவளைக்   கொல்லுதல்   அதனிலும் பாவம். அதனினும்
கற்புக் கடம்பூண்டு நின்ற  தவத்தியைக்  கொல்லும் பாவம் பெரிது; 
எனவே தன் மன்னனை இப்பழியினின்று காக்க முயலும் மகோதரன் 
இராவண ஆணவத்தை அறிந்தவனாதலின், 'குலத்துக்கே தக்கான் 
என்றும் 'சிறியன்' என்றும் முத்தேவரும் நகைப்பர் எனக் கூறித் 
தடுக்கின்றான். 
 

(58)
 

9244.

'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி 

அன்று;

தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல், அதுவும் 

அன்று;

புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய விரதம் 

பூண்டாய்!

வலத்து இயல்பு அன்று; மாயாப் பழி கொள 

மறுகுவாயோ?

 

புலத்தியன் மரபில் வந்து புண்ணிய விரதம் பூண்டாய் -
புலத்திய முனிவனுடைய மரபில் பிறந்து புண்ணிய விரதங்களை
மேற்கொண்டவனே! நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி